Tuesday, January 25, 2011

யாழ்ப்பாணத்தை முற்றுகையிடும் உலக நாடுகள்

0 comments
அமெரிக்கத் தகவல் கூடம் யாழில் திறந்து வைப்பு!செவ்வாய், 25 ஜனவரி 2011 00:33 .அமெரிக்க தகவல் நிலையம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில முதன் முதலாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினிஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க தகவல் கூடம் தான் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதலாவது உயர்தர இணைய இணைப்பு கொண்ட நிலையமாகும்.

அமெரிக்க தகவல் கூடமானது திறக்கப்படுவதானது நாம் யாழ்.மக்களோடு கொண்டுள்ள தளராது தொடரும் அர்ப்பணத்தின் ஒரு அடையாளமாகும்.



அமெரிக்க தகவல் கூடம் என்பது வெறுமனே புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் ஒரு இடமன்று, மாறாக டிஜிட்டல் தொலை தொடர்பு வசதிகள் மூலம் உலகம் முழுவரையும் இணைக்கும் ஒரு இடமாகும்.



இத்திறப்பு விழா வைபவத்தோடு அமெரிக்க முதல் காரியத்தை சாதித்து வைக்கின்றோம். விரைவில் தகவல் கூடம் உயிரோட்டமுள்ள சமூக நிலையமாக உருவாகி இலங்கையரும் அமெரிக்கர்களும் உரையாடும் ஒரிடத்தினை பெற்றுத்தரும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் என்றார்.



இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் சங்க பிரமுகர்கள், சமயப்பெரியார்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!

0 comments
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி இது என்று வாய் கூசாமல் புழுகிக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலச் சேவைகள் இதோ இன்றைக்கும் தொடர்ந்திருக்கிறது.

இதுவரையிலும் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இன்றைக்கும் அமைதிப் புறாவாக "ஏன் ராசா என் மக்களை கொல்றீங்க?" என்று புலம்பலை மட்டும் செய்து கொண்டிருக்கிறது..!


இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!

இதற்குக் காரணம் 'கொடுக்க' வேண்டியதைக் கொடுத்தால் தமிழக ஆட்சியாளர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களுடைய மக்களை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். நாம் கஷ்டப்படத் தேவையில்லை என்பதை மத்திய ஆளும் கட்சியினரும் கண்டறிந்து வைத்துள்ளனர்.

எச்சில் இலைக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருக்கும் நாய்களைப் போல மாநில அரசின் ஆளுநர்கள், தங்களது குடும்பச் சுகத்திற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகளிடம் தமிழ்நாட்டை அடகு வைத்து வெகுநாட்களாகிவிட்டது..

இப்போதும் அடுத்து ஆட்சிக்கு வருவதுதான் தனது குடும்பத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து மத்திய அரசு என்ன சொல்கிறதோ.. எப்படி நடக்கச் சொல்கிறதோ அப்படியே நடந்து கொண்டு பதவியைப் பிடித்துக் கொள்ள நாடகமாடி வருகிறார் தமிழக முதல்வர்..!

மாதத்திற்கு இரண்டு தமிழ் மீனவர்களாவது சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுவோம்.. எழுதிவிட்டோம். பிரதமரும் பதில் கடிதம் போட்டுவிட்டார்.. இனி அதுபோல் நடக்காது என்று பழைய கீறல் விழுந்த ரிக்கார்டையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் முதல்வர்.

மத்தியில் இருக்கின்ற ஆட்சியிலும் ஒரு தமிழர்தான் பிரதான மந்திரியாக இருந்து வருகிறார். 'சின்னப் பயல் சிதம்பரம்' என்ற இந்த மாடி வீட்டு மேதாவியின் கைக்கங்கரியத்தால் இவருடைய உற்றமும், சுற்றும் மட்டும் மீண்டும் மெகா கோடீஸ்வரர்களான நிலையில் உள்துறையை செப்பனிட்டு பாதுகாக்க சவுத் பிளாக்கிற்கு அனுப்பப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நாடு இன்னும் பல அல்லல்களுக்குள் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. இருபது மைல் தொலைவில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தமிழர்தான் இந்தியாவுக்கே உள்துறை அமைச்சர் என்பது தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத, அதே சமயம் கசப்பான உண்மை.

இவர் தமிழரே இல்லை என்பது மட்டுமல்ல... மனிதரே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கி, தமிழ் ஈழத்து மக்களைக் கொலை செய்ய ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருக்கிறார்.. இந்த மனிதரிடம் போய் நடவடிக்கை எடு என்றால் எப்படி எடுப்பார்...?

இன்னும் பத்து, நூறு மீனவர்கள் செத்தால்கூட இந்த மாடி வீட்டு மேதைகள் படியிறங்கி வர மாட்டார்கள். பேசாமல் இன்றைக்கு அவரது வீட்டுக்கு புடவை, ஜாக்கெட், வளையல் சகிதமாக வந்திருந்த சீர்வரிசையை பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெற்றுக் கொண்டாவது தனது பெருமையை இவர் பறை சாற்றிக் கொள்ளலாம்.

பாண்டியன், ஜெயக்குமார் என்ற இரண்டு மீனவர்களும் அடுத்தடுத்த 10 நாட்கள் இடைவெளிக்குள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் துயரமான சம்பவங்கள். கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் என்று அரசு சொல்லுமேயானால், கடல் எல்லையாத் தாண்டாமல் செல்ல அந்த எல்லையில் இவர்கள் நின்றிருக்க வேண்டுமே..? அல்லது அதுதான் எல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்ன பாதுகாப்பு வசதிகளை அங்கே செய்து வைத்திருக்கிறார்கள்.


மிதக்கும் மிதவைகளைப் போட்டு வைத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் மிக வசதியாக அன்றாடம் கடலோரக் காவல்படை சென்று வரும் மிகக் குறுகிய இடங்களில் மட்டுமே அடையாளத்திற்காக வைத்துள்ளது கடற்படை.

மீனவர்கள் மீன்கள் எங்கு இருக்குமோ அங்குதான் மீன் பிடிக்கப் போவார்களே ஒழிய.. மிதவைகள் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்து அவற்றின் அருகே வந்து மீன்களைப் பிடிக்க முயல்வதி்ல்லை. இந்த ஒரு சிறிய அறிவார்ந்த பிரச்சினையைக்கூட அணுகத் தெரியாத அளவுக்கு கடற்படையும், தமிழக அரசும், மத்திய அரசும் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டும்..!

அப்படியே எல்லை தாண்டிப் போனாலும்கூட நமது நாட்டு தொழில் நுட்பத்தையும், பண உதவியையும், விலை மதிக்க முடியாத ஆயுத உதவியையும் பெற்று வைத்திருக்கும் அந்த நாடு நமது நாட்டு மீனவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்க வேண்டுமே..?

துப்பாக்கிச் சூடும், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், கழுத்தில் கயிற்றைக் கட்டி கொலை செய்வதும்தான் அந்த நாடு செய்யும் நன்றிக் கடனா..? இப்படியொரு நாட்டிற்கு மத்திய அரசு ஏன் மீண்டும், மீண்டும் நிதியுதவி செய்கிறது..?

நன்றி கெட்ட நாட்டை சொற்களால் திருத்த வழியில்லையெனில், பலத்தைக் காட்டலாமே..? பலத்தைக் காட்டத் துப்பில்லையெனில் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்..? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ஒரு மரணம் நமது வீட்டில் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதனை முறைப்படி தெரிவித்து ஆகக்கூடிய நிவாரணப் பணிகளையும் தெரிவிப்பதுதான் ஜனநாயக அரசின் கடமை. இப்போது இப்படியா நடக்கிறது..?

கொலையா..? மீனவர்களா..? போராட்டமா..? சேலை வழங்குகிறார்களா..? எங்க..? என்று ஆளும் கட்சிக்குச் சொந்தமான டிவியில் வலைவீசி தேடும் அளவுக்கு செய்திகளைச் சுருக்குகிறார்கள்.

எந்தவிதத்திலும் கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.


எழவெடுத்த தற்போதைய முதல்வர், சுடுகாட்டில் பொணத்துக்குக் கொள்ளி வைக்கக் கற்பூரத்தைக்கூட நான்தான் வாங்கிக் கொடுத்தேன் என்று சொல்வார் போலிருக்கிறது.. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்குக் கொடுத்த நிதியுதவி செய்தி பேப்பரில் கூட வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார். என்ன எழவுடா இது? இவர்களுக்கு மானம், ரோஷமெல்லாம் கிடையவே கிடையாதா..?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி செத்த வீட்டிலும் விளம்பரம் தேடிக் கொள்ள இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறது..!

இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..! அவரவர்க்கு அவரவர் சம்பாத்தியம் முக்கியமாக இருக்கிறது.. ஆனால் இவர்களையெல்லாம் ஆட்சிக்குத் தேர்வு செய்த நாம்தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்..!

மக்கள் மத்தியில் கசப்புணர்வு என்றவுடன் தாத்தா உடனடியாக ஓய்வு என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டார். இதைச் சொன்னவுடன் தமிழர்கள் அனைவரும் பொங்கி வந்து கண்ணீர் விட்டுக் கதறியழுது இவரைத் திரும்ப அழைப்பார்கள் என்று நம்புகிறார்.. அப்படியே இந்தத் துரோகி, ஒரேயடியாகப் போனால்கூட இங்கே எவருக்கும் கவலையில்லை என்பதை இந்த நேரத்தில் வருத்தத்துடன் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!

இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!

http://truetamilans....og-post_25.html

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா சபையில் கேள்வி.

0 comments


வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படைத்தரப்பினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தி விபரிப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். அண்மையில் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சரணடைவதற்கு முன்னர் செய்மதி தொலைபேசியின் ஊடாக விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ஏன் மேரி கொல்வின்னுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் தெரிவித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய நாடுகள் சபையின் மேலதிகாரி விஜய் நம்பியாரும் பங்கு கொண்டிருந்தார். சரணடைவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொண்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் உறுதியளித்தமையை அடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்துள்ளனர். எனினும் அரசாங்கம் தமது உறுதி மொழியை மீறி, அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஏ மேரி கொல்வின் தன்னை மன்னிக்குமாறும், தம்மால் ஏதும் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது வெறுமனே இடம்பெற்றது இல்லை எனவும், ஏற்கனவே பேசி இணங்கிக் கொண்டதன் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்தனர் எனவும் ஆனால், உறுதி மொழி மீறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட மற்றுமொரு நபரான விஜய நம்பியாரின் அதன் பின்னரான செயற்பாடுகள் என்ன என ஐக்கிய நாடுகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் விஜய் நம்பியார் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாக தாம் அறிவதாகவும், எனினும் இது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அல்ஜசீராவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே விஜய் நம்பியார் இந்த விளக்கமளிப்பை மேற்கொண்டிருந்தார். எனினும் விஜய் நம்பியார் ஏக பிரதிநிதியான ஏன் கொல்வின் இதற்கு மாறுப்பட்ட கருத்தை முன்வைக்கிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து, கருத்து வெளியிடுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி குறித்த ஐக்கிய நாடுகளின் செய்தியாளரை எச்சரித்துள்ளார். பெயர்களை குறிப்பிட்டமை தொடர்பிலா தம்மை அவதானமாக இருக்க கூறுகிறீர்கள் என செய்தியாளர் கேட்டமைக்கு, இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்புகின்ற பார்வை கோணம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தாம் பரிசீலிப்பதாக பேச்சாளர் மார்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
http://www.eelampres.../2011/01/11639/

Monday, January 24, 2011

தமிழீழ தேசிய அட்டை தமிழீழ அரசினால் வழங்கப்பட்டு வருகிறது

0 comments
m
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என குறியீட்டு ரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது.

தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாக தேசிய அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றது. ஏனைய நாடுகளில் விரைவாக விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.

அமெரிக்காவில், தமிழீழ தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த தலைமை அமைச்சர் திரு.விசுவாநாதன் உருத்திரகுமாரன் அவர்கள்,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், அடுத்த கட்டத்துக்கு போகின்றோம் எனும் ரீதியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், 2007ம் ஆண்டு நாடு எனும் அடிப்படையில் தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கினார். அதன் தொடர்சியாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தேசிய அட்டைகளை வழங்குகின்றது என குறிப்பிட்டார்.

மேலும், சிறிலங்கா அரசு, தமிழீழம் ஒன்று அங்கில்லை என்ற கருத்தை வலுவாக முன்வைத்து, தமிழர்களின் அடையாங்களை சிதைத்துவரும் நிலையில், எமது அடையாளத்தை பேணுகின்ற நோக்கிலும் இந்த தேசிய அட்டை அமைகின்றதெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிறந்திருக்கும் 2011ம் ஆண்டு, உலக அரங்கில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மிகுந்த வாய்ப்புக்கள் நிறைந்த ஆண்டாக உள்ளதெனவும், ராஜதந்திர மட்டங்களில் இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாடுகளில் மீளாய்வுகள் இடம்பெற்று வருகின்றமை இதில் குறிப்பிடதக்க ஒன்றாக கருதலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


தமிழீழ தேசிய அட்டை
Uploaded by valarytv. - News videos hot off the press.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது!

0 comments
தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது.
கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில்,
"நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார்.
வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சூடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சூடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின்போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன், தென்சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள்.
வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.
1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது.
அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.
திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சூடானிய மக்களுக்கும் அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


பிரான்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்-பெருமளவு தமிழ் மக்கள் ஒன்றுகூடினர்

0 comments



Posted Image

22 ஜனவரி 2011 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் தமிழீழ மக்களவை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்கள்மீது இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷேவையும், அவரது சகாக்களையும் அமெரிக்க அரசு கைது செய்து, அவர்மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்ற கொட்டொலிகளை முழங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், அமெரிக்க அரசுக்கான மனு ஒன்று அமெரிக்க தூதராலயத்தில் கையளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் என மன்னார் ஆயர் அருட்திரு ஜோசப் இராயப்பு ஆண்டகை அவர்கள் சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில் சாட்சியம் அளித்துள்ளார். அவர் இதற்கான ஆதாரங்களையும் அங்கு சமர்ப்பித்துள்ளார். சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்த இறுதித் தகவலாக இதனைக் கொள்ளலாம்.

இறுதி யுத்தத்தில் மட்டும் படுகொலை செய்யப்பட்டவர்களின் தொகை இதுவாக இருந்தால், கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தங்களின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களது தொகையுடன் சேர்த்தால், சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் இன அழிப்பு யுத்தத்தில் இதுவரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளார்கள். தற்போதைய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷே காலத்திலேயே அதிக அளவு தமிழர்கள் பலியாகியுள்ளனர். அவரை, ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்வதுடன், அமெரிக்க பிரஜா உரிமையுடைய அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷே மீது அமெரிக்க சிவில் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்சில் 2009 மே 18 இற்குப் பின்னர், வாரம் தோறும் உலக நாடுகளிடம் நீதி கோரித் தொடர் போராட்டங்களை நடாத்திவரும் பிரான்ஸ் தமிழர் பேரவையின் தலைவர் திருச்சோதி திருக்குலசிங்கம் அவாகள் கருத்துத் தெரிவித்தபோது,

எமது மக்களது விடுதலைப் போராட்டமும், எதிர்கொண்ட இழப்புக்களும்,நாளை மறந்த விடயமாக மாறிவிடக் கூடாது. நைஜீரியாவில் பைபர (Biafra Igbo) மக்கள் விடுதலை போரரட்டம் போல் எமது போராட்டமும் தோல்வியில் முடிந்து விடகூடாது. சிறி லங்கா அரசு சர்வதேச நியமங்களை மீறி, அரச சார்பற்ற அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளியேற்றி

ஈவிரக்கமற்ற இனப் படுகொலையை எமது மக்கள்மீது நடாத்தியதோ, அதேபோல் நைஜீரிய அரசு 1967 - 1970 களில் 10,00000 மக்களை பட்டினி போட்டும், ராணுவ பலம் கொண்டும் அந்த இன மக்களின் சுயநிர்ணய உரிமை போரரட்டத்தை அழித்தார்கள்.

இந்த நிலமை எமது மக்களுக்கும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. சிங்கள அரசு, சுமார் நான்கரை இலட்சம் மக்கள் ஒரு சிறு கடற்கரை நிலத்திற்குள் அடைத்து, அவர்களது தொகையை உலக நாடுகளுக்கு 70,000 ஆக அறிவித்து உணவு, மருந்துத் தடைகளை ஏற்படுத்தி அந்த மக்களைப் பசியாலும், தாகத்தாலும், மருத்துவ வசதிகள் கிடைக்காமலும் துடிதுடித்துச் சாக வைத்தது. அதே போல் இனிமேலும் நடக்காது என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. நைஜீரிய பைபர மக்கள் போல் நாமும் அழிந்து போக முடியாது.

உலக நாடுகள் நைஜீரியாவில் பைபரடியைகசய (Biafra) பிரதேசத்தை சேர்ந்த இக்போiபிழ(Igbo) இன மக்களுக்கு நடந்த அவலங்களைப் படிப்பினையாகக் கொண்டு, அந்த நிலை ஈழத் தமிழர்களான எமது மக்களுக்கும் நடந்து விட கூடாது என்ற சிந்தன்னையுடன் நாம் எமது வெகுஜன போராட்டங்களையும் அரசியல் போராட்டங்களையும் வேகப்படுத்த வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி 04 சிங்கள அரசின் சுதந்திர தினத்தை நிராகரித்து, சிறீ லங்கா அரசை புறக்கணிக்கும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

Posted Image
Posted Image
Posted Image

--
Thiruchchothi
Président de La Maison du Tamil Eelam
mte.france@gmail.com

வெள்ளை மாளிகை முன் போராட்டம் - அமெரிக்க தமிழர்களுடன் இணையும் கனடியத் தமிழர்கள்

0 comments


அமெரிக்கா வந்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சாவை கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை WASHINGTON, DCஇல் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க தமிழ் மக்களுடன் கனேடிய தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்து மகிந்த ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி, பெரும் தொகையான தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டும் தமிழ் மக்களை காணாமல் போகச் செய்ததிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்முறைச்செயல்களை மேற்கொண்ட மேற்கொண்டு கொண்டு இருப்பவர்களில் அவருக்கும் பங்கு உண்டு, எனவே அனைத்துலக சட்டங்களின் படி உடனடியாக அவரை கைது செய்யுமாறு கோரி நடக்கும் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அமெரிக்கா வொசிங்டன் நகருக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கு செய்துள்ளது.

அமெரிக்கா செல்வதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது அதற்கான உங்கள் பதிவுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.

கனேடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி இலக்கம் :

416 - 880 - 6057 அல்லது 416 - 646 - 7624

http://www.pathivu.c...ticle_full.aspx

ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர் ஜெயசூர்யா விளையாடும் மைதானத்தை முற்றுகையிடுவோம் : சீமான்

0 comments
சென்னையில் இலங்கை வீரர் ஜெயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது.

இறுதிப்போட்டி மாயாஜால் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா, சஞ்சய்பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்ப்ளி, சுனில்ஜோஷி ஆகியோர் ஆடுகிறார்கள்.

இதில் இனவெறி மகிந்த ராஜபக்‌ஷே வின் தீவிர ஆதரவாளரும்,இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சனத் ஜெயசூர்யா நாளை(25-01-2011) செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்.

இவர் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு நச்சுக்கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.

இவர் தமிழ்நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.அங்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் இனவெறி ராஜபக்‌ஷேவினால் அழிக்கப்பட்டு விட்ட்து.

எஞ்சியிருப்பவர்கள் முள் வேலி முகாமிற்குள் அடைக்கப்பட்டு உணவின்றி,உடையின்றி,அடிப்படை வசதிகள் எதும் இன்றி நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் பல்லாயிரம் தமிழரை சிங்கள அரசு தனிக் கொட்டடியில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.இது போக என் மீனவனைத் தினமும் சிங்களக் கடற்படை கொலை செய்து கொண்டிருக்கின்றது.

உலகின் கொடுங்குற்றங்கள் அனைத்தையும் செய்த ராஜபக்‌ஷேவோ இது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் ஆணவத்துடனும் மமதையுடனும் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை கிரிக்கெட் விளையாட என் தாய் மண்ணிற்கு அனுப்பியுள்ளார
.
இது எம் இனத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாகவும் எம்மை அவமானப் படுத்துவதாகவும் உள்ளது.ஜெயசூர்யா கிரிக்கெட் விளையாட தமிழக அரசின் விளையாட்டு மைதானம் பயன்படுகிறது.

இதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.ஆகவே தமிழக அரசும் இந்த விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவன்ங்களும் உடனடியாக நாளை நடைபெறும் போட்டி உட்பட ஜெயசூர்யா பங்கேற்கும் அனைத்து போட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.

இதனையும் மீறி விளையாட்டை நடத்த முற்பட்டால் கிரிக்கெட் மைதானத்தையும், விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவன்ங்களின் அலுவலகங்களையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran

உலகத் தமிழர் அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு கனடா நீதிமன்றம் தீர்ப்பு

0 comments
கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகத் தமிழர் அமைப்பானது கனடாவில் புலிகளுக்கு மிகவும் முக்கிய மானதொரு அமைப்பாகச் செயற்பட்டு வந்தது என கனேடிய றோயல் பொலிஸ் அதிகாரி ஸ்ரீவ் டப்ரெயுல் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் உடமைகளை முடக்கி கனேடிய அரசாங்கத்துக்கு வழங்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவைத் தாம் சாதகமாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் கனேடிய றோயல் பொலிஸின் பிரதி ஆணையாளர் கிலிஸ் மிச்சவுட் கனேடிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தாம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை கனேடிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

tamilthai.com

அநுராதபுரம் நீதிமன்றம் அதிகாலை தீப்பற்றிக் கொண்டது

0 comments

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது . மேலும், தீப்பற்றிக் கொண்டதால் நீதிமன்ற ஆவணங்களுடன் சேர்ந்து மூன்று நீதிமன்ற கட்டுடத் தொகுதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பில் வெள்ளத்தால் சேதமடைந்த சீனப் பொறியியலாளர்களின் வீதிகள்!

0 comments

அண்மையில் சீனப் பொறியியளாலர்களின் நேரடி கண்காணிப்பில் புனர்நிர்மாணம்செய்யப்பட்ட வீதிகள் பல அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் சேதமாக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு கொழும்பு வீதியும் இவ்வாறு பெருமளவில் சேதமடைந்துள்ளது.

எந்தவித தூரநோக்கும் இல்லாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த வீதிகள் ஒரு சில மாதங்களுக்குள்லேயே சேதமடைந்தமை சீன பொறியியளாலர்களின் தரமற்ற வேலைத்திட்டங்களையே காட்டுவதாக புத்திஜீவிகள் விசனம்தெரிவித்துள்ளதோடு மேற்படி வீதிக்கு பாலம் அமைத்தால் மட்டுமே நீண்ட காலம் இவ்வீதியால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர்.

இறுதிப் போரில் 40000பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் பதிலளிப்பதை தவிர்க்கும் மார்டின் நெஸ்கி – இன்னர்சிற்றி பிரஸ்!

0 comments

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்கள் பல வாரங்களாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று இன்னர்சிற்றி பிரஸ் இணையதளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாகப் பேசும் உரிமை ஐ.நாவுக்கு உள்ளது என்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ- மூன் தெரிவித்துள்ள போதிலும் அது தொடர்பான விடயங்களை பான் கீ- மூனின் பேச்சாளர் தவிர்த்து வருகின்றார் என்று அந்த இணையதளம் மேலும் கூறியுள்ளது.
இன்னர்சிற்றி பிரஸ் இணையதளத்தில் மேலும் குறிப்பிடுகையில்,’மனித உரிமைகள் தொடர்பாகப் பேசும் கடமை ஐ.நாவுக்கு உண்டு” என்ற தலைப்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ -மூன் கடந்த சனிக்கிழமை ஐ.நா. செய்தி நிலையத்தின் ஊடாக உரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ஆனால், மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளை ஊடகங்கள் எழுப்பினால் பான் கீ-மூனின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிக்க மறுக்கிறார்.இலங்கை, மியன்மார் மற்றும் சீனா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஊடகங்கள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்ற போதிலும் மார்டின் பதிலளிக்க மறுக்கின்றார்.
மனித உரிமைகள் பற்றிப் பேசும் மற்றும் உலகில் உள்ள அப்பாவிகளைக் காப்பாற்றும் ஐ.நாவின் அடிப்படை நோக்கத்தை தான் ஒருபோதும் மறந்துவிடவில்லை என்று ஐ.நா. செயலாளர் நாயகம் சனிக்கிழமை உரையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக மார்டின் நெஸ்கியிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அதற்குப் பதிலளிக்காது பல வாரங்களாகத் தவிர்த்து வருகின்றார்.
ஐ.நா.நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம், ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கத்ரினா பிரேக்கின் இலங்கை விஜயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்ட போதிலும் மார்டின் பதிலளிக்கவில்லை என அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

Sunday, January 23, 2011

ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்-வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்(காணொளி)

0 comments
மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ
விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும்
பொதுக்கூட்டங்களிலும்,கட்டுரைகள்,நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து
வருகிறார்.தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும்
போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள்
போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு
செய்திருக்கிறார். தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில்
இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும்
வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு
செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும்
துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.ஈழம் என்பது
தமிழர்களின் தாயகம் என்பதனையும்,சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள்
என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.ஒவ்வொரு தமிழரும்,மனிதநேய
உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம்.இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும்
பரப்பவேண்டியது கடமையாகும். அந்த ஆவணப்படத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளதுhttp://www.youtube.com/watch?v=TcwtpRaW27s&feature=player_embedded.

read me more
 ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்-வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்(காணொளி) http://usetamil.forumotion.com/t10453-topic#16664#ixzz1Brdpgn7u

Saturday, January 22, 2011

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை

0 comments



இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்து, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை வான் மூலமாக தான் பார்வையிட்டதாகக் கூறிய அவர், அந்தப் பகுதிக்கான தனது விஜயம் அங்கிருக்கின்ற பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அவர் கோரியுள்ளார்.

http://www.bbc.co.uk...kaconcern.shtml

மகேஸ்வரனுக்கு வெடி வைச்சது யார்..??!

0 comments
Posted Image

முன்னாள் யாழ் மாவட்ட முன்னணி மண்ணெண்ணை பதுக்கல் வியாபாரியும் பின்னாள் ஐ தே க அமைச்சருமான மகேஸ்வரனின் மனைவியும் தற்கால யாழ் மாவட்ட ஐ தே க எம்பியுமான விஜயகலா மகிந்தரோடு கூடி இருந்து பொங்கல் கொண்டாடும் அற்புதக் காட்சியையே தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

இவரின் கணவர் கொழும்பில் வைத்து அதுவும் கோவிலில் வைத்து இதே மகிந்தரின் ஆட்சியில் போட்டுத்தள்ளப்பட்டதை அக்காச்சி தமிழ் மக்களின் "அதி உன்னத" நலன் கருதி மறந்திட்டாவாமெல்லே...??!

காலமடா சாமி. தமிழக அரசியல்வாதிகளை தூக்கிச் சாப்பிட்டிடுவாங்க போல இருக்கு நம்மட ஆக்கள்..! :o

எதுஎப்படியோ அக்காச்சி தாடிக்கார அண்ணாச்சிக்கு ஆப்படிக்க தயாராகிட்டா என்றது மட்டும் விளங்குது. :D :)

படம்: முகநூல்.

பிரித்தானிய போராட்டத்திற்கும் இளையோர்க்கும்

0 comments
செந்தமிழன் சீமான் ஆதரவுச் செய்தி.

மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ராஜபக்சவுக்கு எதிராக இலண்டனில் நடைபெற இருக்கின்ற போராட்டத்திற்கும் பிரித்தானிய இளையோர்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்து செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டார். ..

எம்.வி.சன்.சி தமிழருக்கு வந்தது ஆபத்து, 15 பேர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்!

0 comments


சனி, 22 ஜனவரி 2011 06:44 .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழர்கள் சுமார் 400 பேர் வரையானோரில் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்கள் என்று தெரிகின்றது.

இவர்கள் 14 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்றும் 15 ஆவது நபர் பயங்கரமான குற்றவாளி என்றும் இவர்களை உடனடியாக நாடு கடத்தியே ஆக வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்து உள்ளார்கள்.

இவர்கள் குறித்த தகவல்கள் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பேரவைக்கு புலனாய்வாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து விட வேண்டும் என்றும் இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும் பேரவைக்கு சிபாரிசும் செய்து உள்ளனர்.

Thursday, January 20, 2011

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

0 comments
விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?
இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக
உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா?
அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்
குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை
அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக
பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன்
உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும்
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்
என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச்
சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம்
என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு
பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

""சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு
பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான
நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த
ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய்
பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு
இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை
இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள்,
அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே
ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில்
துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும்
லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி
களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள்.
அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம்
புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்
தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது
தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக்
கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப்
படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை
ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப்
பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல்
படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி
நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே
சின்னரூபன்... ""நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன்
அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும்
தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
"அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன்
சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து
அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள்
சந்தித்திருக் கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும்
போது தலைவர் வெளி யே வருவார்' என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக்
கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு
தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண்
உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன்
தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு
தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த
நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

நக்கீரன்

உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் Read more: உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்

0 comments
போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்

தமிழர்களே,

"நிறவெறி"-யை காரணம் சொல்லி தென்னாப்பிரிக்கா அணியை தடை செய்ததுபோல் "இனவெறி" இலங்கை அணியை சர்வதேச அளவில் விளையாட தடை செய்யவேண்டியும், உலகக்கோப்பை போட்டி இரத்தகறை படிந்த இனப்படுகொலை மண்ணில் நடைபெறுவதை தவிர்க்ககூறியும் கையொப்பம் பதிவு செய்வோம்.

உலக அளவில் உள்ள மட்டைப்பந்து வாரியத்தின் ஏறக்குறைய இருநூறு மின்னஞ்சல்கள் தரவேற்றம் செய்துள்ளோம்.

நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு புகாரும் அவர்களுடைய மின்னஞ்சல்-ற்கு செல்லும்.

இச்செய்தியினை அனைத்து தமிழ் ஊடகங்களும் இணையங்களும் வெளியிடவேண்டும். தமிழ் இளைஞர்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும்.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க மருத்துவர் "எலின் சாண்டர்" மற்றும் ஜெர்மனி எழுத்தாளர் "ரான் ரேடினோயர்" ஆகியோரும் தங்கள் புறக்கணிப்பை பதிவு செய்துள்ளனர்.

http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011
&

தவிர தனிப்பட்ட முறையிலும் கீழ்கண்ட மின்னஞ்சல்-களுக்கு புகாரை அனுப்பலாம்.

BCCI’s Email Id

cricketboard@gmail.com
bcci@vsnl.com
tncamac@vsnl.net
spawar@mumbaicricket.com
mcacrik@vsnl.com
info@mumbaicricket.com
vdeshmukh@mumbaicricket.com
dvengsarkar@mumbaicricket.com
rshetty@mumbaicricket.com
hwaingankar@mumbaicricket.com
lrajput@mumbaicricket.com
cnaik@mumbaicricket.com
chaudhary@haryanacricket.com
KSCA@cricketkarnataka.com
cgm@cricketkarnataka.com
secyoffice@cricketkarnataka.com
hycricket@rediffmail.com
kphere@gmail.com
ckb@ddca.in
pbhardwaj@ddca.in
rca@cricketrajasthan.in
secretary@cricketrajasthan.in
info@orissacricket.org
webmaster@cricketpunjab.com
jsca_keenan@rediffmail.com
contact@cricjharkhand.org
goacricketassociation@rediffmail.com
mailbox@upca.co.in
vca_nagpur@sify.com
feedback@krishcricket.com
info@krishcricket.com

ICC’s Email Id

enquiry@icc-cricket.com
campbell.jamieson@icc-cricket.com
aarti.dabas@icc-cricket.com
chris.tetley@icc-cricket.com
kunika.viegas@icc-cricket.com
doug.waller@icc-cricket.com
david.richardson@icc-cricket.com
clive.hitchcock@icc-cricket.com
vince.vanderbijl@icc-cricket.com
brent.silva@icc-cricket.com
sarah.edgar@icc-cricket.com
bob.stratford@icc-cricket.com
rudi.koertzen@icc-cricket.com
arani.jayaprakash@icc-cricket.com
peter.manuel@icc-cricket.com
john.holder@icc-cricket.com
david.becker@icc-cricket.com
iain.higgins@icc-cricket.com
colin.gibson@icc-cricket.com
james.fitzgerald@icc-cricket.com
chris.hurst@icc-cricket.com
sami.ulhasan@icc-cricket.com
lucy.benjamin@icc-cricket.com
jon.long@icc-cricket.com
lorinda.rugless@icc-cricket.com
matthew.kennedy@icc-cricket.com
tim.anderson@icc-cricket.com
richard.done@icc-cricket.com
edward.fitzgibbon@icc-cricket.com
hussain.khan@icc-cricket.com
manager@cricamericas.com
cassims@cricket.co.za
devmanager@asiancricket.org
andrew.faichney@cricket.com.au
richard.holdsworth@icc-europe.org
contactACSU@icc-cricket.com
arrie.debeer@icc-cricket.com
hassan.raza@icc-cricket.com
john.rhodes@icc-cricket.com
ron.hope@icc-cricket.com
dharamveer.yadav@icc-cricket.com
public.enquiries@cricket.com.au
peter.young@cricket.com.au
Philip.pope@cricket.com.au
lachy.patterson@cricket.com.au
matthew.slade@cricket.com.au
media@bcb-cricket.com
rimam@bcb-cricket.com
rabeed.imam@gmail.com
media.bcb@gmail.com
steve.elworthy@ecb.co.uk
andrew.walpole@ecb.co.uk
james.avery@ecb.co.uk
bcci@vsnl.com
cricketboard@gmail.com
bcci@vsnl.com
ratnakar.rs@gmail.com
devendra.prabhudesai@bcci.tv
devprabhudesai@gmail.com
info@nzcricket.org.nz
nadeem.sarwar@pcb.com.pk
raza.kitchlew@pcb.com.pk
usman.wahla@pcb.com.pk
info@cricket.co.za
lerato.malekutu@cricket.co.za
wicb@windiescricket.com
pspooner@windiescricket.com
info@zimcricket.org
shingair@zimcricket.org
gdugmore@cricketargentina.com
cricket-belgium@telenet.be
office@cricket-belgium.com
nspeight@cricket.bm
girishr@cricketbotswana.org.bw
ceocricketcanada@gmail.com
cccoach@candw.ky
fijicrick@connect.com.fj
gmcricket@connect.com.fj
dcf@cricket.dk
francecricket.secretary@orange.fr
brimarfell@t-online.de
gca@gibetelecom.net
markbacarese@mac.com
mark@guernseycricket.com
hkca@hkabc.net
suzanne.kenealy@irishcricket.org
sperlman@zahav.net.il
segreteria@crickitalia.org
n-miyaji@cricket.or.jp
chris.minty@jerseycricket.net
barbara.kokonya@cricketkenya.co.ke
david.odhiambo@cricketkenya.co.ke
abaig@gckuwait.com
siva_1946@yahoo.com
cricket@iway.na
tpaneru@gmail.com
richard.cox@kncb.nl
cricketnigfed@yahoo.com
adokiyedans@yahoo.co.uk
billleane@yahoo.com.au
roddysmith@cricketscotland.com
dharmichand@singaporecricket.org
thaiyar.mohamed@singaporecricket.org
wizards@cats-net.com
kader@imcs.co.th
kader@cricketthailand.com
dmani@eim.ae
mani@abudhabicricket.ae
justine@ugandacricket.com
info@ugandacricket.com
dlockerbie@usaca.org
vanuatucricket@vanuatu.com.vu
drashawa@googlemail.com
drashawa@yahoo.com
shinwaha@gmail.com
aca.secretariat@gmail.com
firstslip@hotmail.com
azeem_ulhaque@yahoo.com
ervwade@yahoo.com
jigmenorbu@hotmail.com
info@brasilcricket.org
manzur_2003@yahoo.com
bruneicricket@gmail.com
cricket_bg@abv.bg
betieh74@yahoo.com
fecacricket@yahoo.com
mcallaghan@cricketchile.cl
zhangterryzt@163.com
alister@cookislandscricket.co.ck
illings@racsa.co.cr
csinovich@croatia-cricket.hr
leonaford571@gmail.com
chairman@cypruscricket.com
info@czechcricket.cz
hugobanks@gmail.com
nandlal5@gmail.com
falklandscricket@horizon.co.fk
ccounsel@sec.gov.fk
fcachairman@cricketfinland.com
gambiacricketassociation@yahoo.com
wampofo@noguchi.mimcom.net
crickadm@otenet.gr
elena@cricket.gr
prakash@cbn.net.id
prakash@cricketindonesia.com
bsrc_iranf@yahoo.com
iomca@manx.net
admin@lsrc.org.ls
kaptech@rocketmail.com
mark.smith@ec.europa.eu
james@hydra-homes.com
imad@microtech.com.mv
femacrik@yahoo.fr
maltacricket@yahoo.co.uk
mcaruana@cortisgroup.com
deb.choudhuri@gmail.com
mounirkhmirau@hotmail.com
debala.group@teledata.mz
akhterabowath@gmail.com
admin@cricketforbundet.no
bobgibb@c2i.net
krwatchs@omantel.net.om
ismaelpatel12@yahoo.com
patel@cwpanama.net
info@perucricket.com
philippinecricket@yahoo.com.au
sandyb@netcabo.pt
qatarca@hotmail.com
manzoorahmad@qatar.net.qa
manzoorahmad2@gmail.com
rwandacricket@yahoo.fr
sebk@lesamoa.net
date@zajil.net
jonathan@seychelles.net
besiomak1@yahoo.co.uk
mark_oman@hotmail.com
shane@cricket.or.kr
Jhowden999@yahoo.co.uk
barbara@sainthelena.gov.sh
chiefhr.officer@sainthelena.gov.sh
pat.J@cwimail.sh
surinaamsecricket@hotmail.com
ebc@swaziweb.co.sz
neil@enjabulweni.ac.sz
treasurer@swedishcricket.se
john.mckillop@swisscricket.ch
tcacom@gmail.com
syed@bilkent.edu.tr
doughtyralph@yahoo.com


Evidences (Photos &Videos)

1. Srilanka: If this isn’t GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

2. Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People - www.Salem-News.com

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

3. Srilanka Executive Video New War Crimes – Channel 4

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

4. www.warwithoutwitness.com
முத்தமிழ்
சென்னை

Thursday, January 13, 2011

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

0 comments
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் மரணம் அடைந்தார்.

ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில்
மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்
திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் அத்துமீறி
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்
குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே
உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25.

இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து, இறந்த பாண்டியனின் உடலுடன்
மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் - நாகப்பட்டினம்
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

nakkheeran

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா

0 comments
ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா
[ புதன்கிழமை, 12 சனவரி 2011, 09:52.29 AM GMT +05:30 ]

ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும்,
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம்
இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக
வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா
பெர்​னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள்
மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப்
பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு
இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.

இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான
அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு
முதலில் வருந்துகிறேன்.

இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத்
தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும்.
பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின்
வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள்
படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான
கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு
வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று
பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று
வந்தேன்.

அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க்
கேட்க வாய்ப்பு இல்லாமல்... சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல்
இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்?
எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில்
சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர்,

''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும்
முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக
முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம்
பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?’ என்று கதறுகிறார்கள் அந்தப்
பெண்கள்.

மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக்
கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து
இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான்
என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன்.

தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள
முடியவில்லை.. இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில்,
கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு
உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்
சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.

போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும்
சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்
பிச்சைக் காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள்
எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும்
இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட
வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள்.


கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும் மக்கள் வேலையின்றி,
வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த
கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில்
மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை
மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை
இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன்
நடக்​கிறது.

தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு
கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத்
திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில்
மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.

இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற
வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப்
பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு
முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ வெளியேறும் காலம்
வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று
நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள்.

இனவெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில்
பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான
'தகத்தகாயக் கதிரவன்’கள்!

நன்றி: ஜூனியர் விகடன்

ஈழத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம்-1

0 comments


– ஈழத் தமிழர்கள் - குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு
மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில்
என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த
சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக
புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல்
பணியகம் ( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல்
யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த
நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடகவியலாளர்
தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு
மிகப்பெரிய சவாலாக இருந்துவருவதாகவும், புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த
செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா தேசத்திற்கும் இந்தியாவின்
இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த
இரண்டு நாடுகளும் சந்தேகிப்பதால், புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும்,
அவர்களது உளவியல் பலத்தையும் குறிவைத்து இந்த இரண்டு நாடுகளும் மிகப்பெரிய
அளவில் உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற
பொழுது, அந்த ஊடகவியலாளரின் கூற்றில் நிறைய சாத்தியப்பாடுகள் இருப்பதை
உணக்கூடியதாகவே இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள் தொடர்ச்சியாக
வெளியிட்டுவருகின்ற கருத்துக்கள், இந்தியாவில் சில தலைவர்களைக் கொலை
செய்யப் புலிகள் திட்டமிட்டுவருவதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள்,
கே.பி. என்கின்ற விடுதலைப் புலி முன்னாள் முக்கிஸ்தரை சிறைப்படுத்தி,
நிர்கதியாக நிற்கும் அவரை வைத்து மேற்கொள்ளப்படுகின்ற சதிகள் - இதுபோன்ற
பல விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, புலம் பெயர்
தமிழர்களின் உளவியலைக் குறிவைத்து ஒரு மிகப் பெரிய சதி நடைபெற இருப்பதை
சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணரக்கூடியதாகவே இருக்கின்றது.

இந்த இடத்தில் சிலருடைய மனங்களில்; சில கேள்விகள் எழலாம். புலம்பெயர்
தமிழர்களைக் குறிவைத்து எப்படியான உளவியல் நடவடிக்கையை எமது எதிரிகள்
மேற்கொள்ளக்கூடும்?

அந்த உளவியல் நடவடிக்கைகள் எப்படியான விளைவினை ஈழத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்?

இதனால் ஈழத் தமிழினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன? எதிரிகளின்
இந்த உளவியல் நடவடிக்கையைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் என்ன
செய்யவேண்டும்?

இவ்வாறு பல கேள்விகள் உங்களுடைய மனங்களில் எழலாம். புலம்பெயர் தமிழர்கள்
மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கும்
நோக்கம், எதிரிகளின் அந்த உளவியல் நடவடிக்கையின் பிரதான உள்நோக்கமாக
இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் இனி ஒரு விடுதலைப்
போராட்டம் பற்றிச் சிந்தக்க முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக அவர்களைப்
பலவீனப்படுத்துவதென்பது, சிறிலங்கா-இந்திய உளவியல் நடவடிக்கைகளின் மற்றொரு
நோக்கமாக இருக்கலாம்.

இவற்றை விட மற்றொரு குறிக்கோளும், இந்த உளவியல் நடவடிக்கைக்கு
இருக்கின்றதாக, என்னுடன் பேசிய அந்த தென்னிலங்கை ஊடகவியலாளர் தெரிவித்தார்.

அதாவது, விடுதலைப் புலிகளையும், அந்த அமைப்பின் தலைமையையும் ஈழத் தமிழர்
மற்றும் உலகத் தமிழர் மனங்களில் இருந்து முற்றாகவே அகற்றிவிடும் நோக்கம்
சிறிலங்கா மற்றும் இந்தியா மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகளின்
பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர்
வே.பிரபாகரன் பற்றியும் உலகத் தமிழர் மனங்களில் இருக்கின்ற பிரமாண்டத்தை,
ஈடுபாட்டை, நம்பிக்கையை, ஆர்வத்தை, அன்பை சுக்குநூறாக உடைத்தெறிவதென்பது
எதிரியின் இன்றைய முக்கிமானதொரு நகர்வாக இருக்கின்றது.

மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதென்பதில் ஆரம்பமான இந்த முயற்சி,
பல்வேறு ஊடகங்களை உருவாக்குவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, பல்வேறு
வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதினூடாகப் பயணித்து, இன்று
திட்டமிட்ட உளவியல் போர் என்கின்ற அளவிற்கு முன்னேறி இருக்கின்றது.

உலகத் தமிழர்கள் தங்களது கதாநாயகர்களாக, மிகப் பெரும் தியாகிகளாக
நினைக்கும் மாவீர்களையும், தங்களது உன்னதமானதும் ஒப்பற்றதுமான தலைவனையும்
அவர்களது மனங்களில் இருந்து அழிப்பதென்பது எவராலும் முடியாத காரியம் என்று
எங்களில் பலர்; கூறலாம்.

'ஈழத் தமிழர்களுக்கு உலகில் ஒரு முகவரியைத் தந்த அந்த உன்னதத் தலைவரை அந்த
மக்கள் மறப்பதா- அது முடியவே முடியாது.."- இவ்வாறு பலர் வாதிடலாம்.

ஆனால் psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற
உளவியல் நடவடிக்கை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தைக் கொண்டு, முடியாது
என்று நினைக்கின்ற பல விடயங்களை சாதித்துக்காட்டிய வரலாறு உலகில் நிறையவே
இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஹிட்லர் என்கின்ற ஒரு மிகப் பெரிய தலைவனை உலகமும், அவனது
சொந்த ஜேர்மணிய மக்களும் முற்றாகவே நிராகரிக்கும்படியான உளவியல்
நடவடிக்கையை அமெரிக்காவும், மேற்குலகும் மேற்கொண்டு அதில் இன்று மிகப்
பெரிய வெற்றியையும் அடைந்திருக்கின்றது.

முதலாம் உலகப் போரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த ஜேர்மனி, தனது
பிரதேசங்கள் பலவற்றையும் அயல்நாடுகளிடம் ஒப்படைத்து, மீளமுடியாத பல
ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி, உலகத்தின்
மத்தியில் கூணிக் குறுகி நின்று கொண்டிருந்தது. அப்படியான நிலையில் இருந்த
ஜேர்மணியை மீண்டும் ஒரு உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்திய ஒருவர்தான் ஹிட்லர்.

பாலங்கள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், என்று
ஜேர்மனியை உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு நடாத்திச் சென்றவர் ஹிட்லர்.

தொழில்துறையில் ஜெர்மணியை அவர் ஒரு உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தார்.

ஒரு காலகட்டத்தில் ஜேர்மணியில் வேலையில்லாத ஒருவர் கூட இல்லை என்கின்ற
அளவிற்கு அந்த தேசத்தை உலகின் தரவரிசையில் அனைத்து விடயங்களிலும் ஒரு
உன்னத ஸ்தானத்திற்குக் கொண்டு சென்றவர்தான் ஹிட்லர். உலகின்
நெருக்குவாரங்கள் அனைத்தையும் மீறி ஜேர்மணியின் இராணுவத்தை உலகமே
வியக்கும் அளவிற்கு கட்டியமைத்தார். முதலாம் உலகப் போர் தோல்வியால்
கிட்டத்தட்ட அநாதையாக விழுந்துகிடந்த ஜேர்மன் தேசத்தை, மீண்டும்
நிமிர்ந்து உற்காரவைத்த- அதுவும் ஒரு உயரிய சிம்மாசனத்தில் உற்கார வைத்த
ஒரு சிறந்த தலைவர்தான் ஹிட்லர்.

ஆனால் அந்த ஹிட்லர் என்கின்ற தலைவனை இன்று உலகம் முற்றாகவே
நிராகரித்துவிட்டுள்ளது. உலகம் மாத்திரமல்ல ஹிட்லர் எந்த சேத்திற்காக
பாடுபட்டாரோ, எந்த தேசத்தை உலகின் தரத்திற்கு உயர்த்தினாரோ, எந்த
தேசத்திற்கு உலகில் ஒரு முகவரியைப் பெற்றுக்கொடுத்திருந்தாரோ, அந்த தேசமே
இன்று ஹிட்லர் என்கின்ற தனது தலைவனை நிராகரித்து விட்டுள்ளது. ஹிட்லர் பல
நாடுகளை ஆக்கிரமித்தார் என்ற குற்றச்சாட்டு மேற்குலகால் அல்லது அவர் பற்றி
அவதூறு பேசுபவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் ஹிட்லர் நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்படும் அதே
காலப்பகுதியில், பிரித்தானியா உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து தன்வசம்
வைத்திருந்தது என்கின்ற உண்மையை ஹிட்லரை தூற்றும் யாவரும் கருத்தில்
எடுக்கத் தவறுகின்றார்கள்:.

அதைவிட ஜேர்மனி அயல்நாடுகள் மீது படைநடவடிக்கைகளை எடுத்ததாக
குற்றம்சாட்டப்பட்ட அதே காலப்பகுதியில், இத்தாலி
(07.04.1939இல்)அல்பேனியாவைக் கைப்பற்றியது, ரஷ்யா பின்லாந்தை
ஆக்கிரமித்தது(30.11.1939), பிரித்தானிய நோர்வேயை
ஆக்கிரமித்தது(08.04.1940), இத்தாலி எகிப்தை ஆக்கிரமித்தது(28.10.1940),
பிரித்தானிய எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது(07.03.1941), பிரிட்டனும்
பிரான்சும் சிரியாவை ஆக்கிரமித்தது(08.06.1941), ஈரானை பிரித்தானியா
ஆக்கிரமித்தது(25.08.1941), பின்லாந்து, ஹங்கேரி, ருமெனியா போன்ற நாடுகள்
மீது பிரித்தானியா போர்தொடுத்தது (05.12.1941), துனீஷியாவை அமெரிக்கா
ஆக்கிரமித்தது(08.11.1942), மலேசியா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,
சிங்கப்பூர், போன்ற நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது(டிசம்பர் 1941).

இப்படி உலகின் பல நாடுகள் மாறி மாறி மற்றைய நாடுகளை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகள்
சிலவற்றை ஆக்கிரமித்திருந்தது. யூதர்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தினார்
ஹிட்லர் என்றொரு குற்றச்சாட்டு…

உக்ரேனில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் 76 இலட்சம் மக்களைப்
படுகொலை செய்து இனஅழிப்பொன்றை மேற்கொண்ட, சீனாவின் நான்கிம் பிரதேசத்தில்
ஜப்பானியப்படைகள் இலட்சக்கணக்கான சீனர்களை படுகொலை செய்த
காலப்பகுதியில்தான், ஹிட்லர் பல இலட்சம் யூதர்களையும்,
கமியூனிஸ்டுக்களையும் படுகொலை செய்திருந்தார். இனப்படுகொலைகளிலும்,
ஆக்கிரமிப்புப் போர்களிலும் உலகின் பல நாடுகளுமே சாதாரணமாக
ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஹிட்லர் என்கின்ற தலைவன்
இதுபோன்ற காரியத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் ஹிட்லர் மாத்திரம் உலகினாலும், அவரது சொந்த மக்களினாலும் இன்று
ஓரம்கட்டுப்பட்டதற்கு அவருக்கு ஏற்பட்ட தோல்வியும், அந்தத் தோல்வியைத்
தொடர்ந்து அமெரிக்காவும், அதனது நேச நாடுகளும் மேற்கொண்ட உளவியல்
போரும்தான் காரணம்.

இன்று ஜேர்மனியர்கள் ஹிட்லரை முற்றாகவே மறந்துவிட்டார்கள். கொஞ்சம் நினைவு
வைத்திருப்பவர்கள் கூட அவரைப்பற்றிய வெறுப்புடன்தான் ஹிட்லரை நினைவு
வைத்திருக்கின்றார்கள். இத்தனையையும் சாதித்தது pளலஉhழடழபiஉயட ழிநசயவழைளெ
என்று அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள்தான். இன்று உலகத்
தமிழர்களைக் குறிவைத்து எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உளவியல்
நடவடிக்கைகள், இதனைத்தான் சாதிக்க நினைக்கின்றது.

இப்படியான ஒரு விளைவைத்தான் புலிகளுக்கும், அதனது தலைமைக்கும் ஏற்படுத்த நினைக்கின்றது சிங்கள தேசமும், இந்தியாவும்.

புலிகளின் தலைவர் ஒரு கதாநாயகனாக, விடுதலை வீரனாக, உதாரண புருஷனான தமிழ்
மக்கள் மனங்களின் நீண்டகாலம் வலம் வருவதை சிறிலங்காவும், இந்தியாவும்
விரும்பவில்லை. அவர் அஞ்சா நெஞ்சம் கொண்ட, யாருக்கும் அடிப்பணியாத ஒரு
வீரனாக சரித்திரத்தில் வலம்வருவதை இந்த தேசங்கள் விரும்பவில்லை. புலிகளின்
தலைவர் பற்றி ஒரு கோளையான, கொடுரமான ஒரு கொலைகாரணான, ஒரு சமூக விரோதியான
ஒரு பிம்பமே உலகத் தமிழர் மனங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதுதான்
இந்த தேசங்களது விருப்பமாக இருக்கின்றது.

இப்படியான ஒரு பிம்பத்தை உலகத் தமிழர் மனங்களிலும், உலகின்
சரித்திரத்திலும் ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் உளவியல் யுத்தம் ஒன்றை
உலகத் தமிழரைக் குறிவைத்து இந்த நாடுகள் மேற்கொள்வதற்குத் தலைப்படுகின்றன.

இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி இதுதான். ஒரு உளவியல் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?

இரண்டு பெரும் தேசங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள
இருக்கின்ற மாபெரும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர்கள்
தயாராக இருக்கின்றார்களா? என்னைப் பொறுத்தவரையில் உளவியல் யுத்தங்களை
எதிர்கொள்ளுகின்ற பலம் பெரிய அளவில் எம்மிடம் கிடையாது என்றுதான் நான்
கூறுவேன்.

ஏன் என்றும், எதிரியின் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்றும் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.

ஆக்கம்: நிராஜ் டேவிட்