Monday, December 20, 2010

சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய கருணா: விக்கிலீக்ஸ்

0 comments


கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுமாறு சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா குழுவினர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தற்போது சிறீலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக உள்ள கருணா, இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது

0 comments


சென்னையில், ஈச்சம்பாக்கம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐந்து பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் மேலும் நடாத்தப்பட்ட விசாரணையின்போது, சென்னையைச் சேர்ந்த பிரகாஸ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்கவே தாங்கள் அங்கு வந்ததாகவும் கூறியுள்ளதாக தமிழகப் பொலிசார் தெரிவித்தனர்.

படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் முரளிதரன்

0 comments
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரிகாலன் இறுதிப்போரின் போது கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் [கருணா] தெரிவித்துள்ளார்.

‘லக்பிம நியூஸ்‘ ஆங்கில வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 17ம், 18ம் திகதிகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யோகி, பாலகுமாரன், கரிகாலன், லோறன்ஸ் திலகர், புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இவர்கள் சிறிலங்காப் படையினரால் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை அவர்களின் உறவினர்கள் நேரில் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

ஆனால் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் இறுதிப்போரிலேயே கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது கூறி வருகிறது.

முன்னதாக யோகி, பாலகுமாரன் ஆகியோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தடுப்புக்காவலில உள்ளவர்களில் அவர்கள் இல்லை என்றும் அமைச்சர் டியு.குணசேகர கூறியிருந்தார்.

தற்போது அமைச்சர் முரளிதரன் கரிகாலனும் இறுதிப் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்து விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

போரின் முடிவில், கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்களின் பட்டியலில், படையினரிடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரை, கரிகாலன், யோகி, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர் போன்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கம் அவர்கள் சரணடையவில்லை என்றும் போரிலேயே கொல்லப்பட்டதாகவும் கூறிவருகிறது.

பொட்டுஅம்மானின் சடலம் படையினரால் கண்டுபிடிக்கப்படாத போதும் அவரும் இறந்து விட்டதாக அறிவித்திருந்தது சிறிலங்கா அரசாங்கம்.

அதுபோலவே அரசாங்கம் கூறுவது போன்று பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை, கரிகாலன் போன்ற முக்கிய தலைவர்களும் இறுதிப் போரிலேயே கொல்லப்பட்டிருந்தால், இவர்களின் பெயர்களை அந்தப் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சு சேர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளளது.

அதேவேளை ‘லக்பிம நியூஸ்‘ வாரஇதழுக்கு அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அளித்துள்ள செவ்வியின் மேலும் கூறியுள்ளதாவது,

“ வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு.

சிங்கள மக்கள் ஏன் வடக்கில் குடியேறக் கூடாது.?

அங்கு 1983ம் ஆண்டுக்கு முன்னர் பல சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன.

அவர்கள் மீளக் குடியேற வேண்டும். அவர்கள் தம்மிடம் ஆவணங்களை வைத்திருந்தால் யாழ்ப்பாணம் திரும்ப முடியும்.

இது குடியேற்றம் அல்ல.

வடக்கு நோக்கி சிங்கள வர்த்தகர்கள் படையெடுப்பதாக சில தமிழ் ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

ஆனால் சிங்கள வர்த்தகர்கள் அங்கு சென்றுள்ளதால் தான் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனிமேல் தலையெடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் அவர்கள் இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக தம்மை மீளமைக்க முனைகிறார்கள்.

லண்டனில் நடந்த போராட்டத்தில் புலிகளின் கொடிகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏந்தியிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்களைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை மிரட்டிப் பணிய வைக்க பிரித்தானியா முனைகிறது.

பிரித்தானியா தடைசெய்துள்ள 40 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகள் இயக்கமும் அடங்கியுள்ளது.

அல்கெய்டா ஆதரவாளர்கள் லண்டன் நகர மையத்தில் ஒசாமா பின்லேடனின் படத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பிரித்தானியா அனுமதிக்குமா?

புலம்பெயர் தமிழர்கள் தனியரசு அமைப்பது பற்றிக் கொண்டிருப்பது விளையாட்டுத்தனமான கருத்து.

அவர்களுக்கு வடக்கு,கிழக்கின் உண்மையான களநிலவரம் பற்றிய எதுவும் தெரியாது.

அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு சதத்தைக் கூடச் செலவிடவில்லை.

புலம்பெயர் தமிழர்களை வெற்றி கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடுமையாக உழைக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரதான தூதரகங்களுக்கும் பொருத்தமான தூதுவர்களை நியமிக்க வேண்டும்.

அவர்கள் தமிழர்களையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்க வேண்டும்.

தற்போதுள்ள தூதுவர்கள் தகைமையுள்ளவர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்தோருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அறிமுகம் செய்ய உள்ளது

0 comments
தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் [14.01.2011] முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவிபரமாவது,

தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் [14.01.2001] முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளது என்ற செய்தியினை மக்கள் அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்வடைகிறோம்.

இவ் அடையாள அட்டையில் உரியவர்களது அவசியமான விபரங்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையையும் [Logo] பொறிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினையைத் தீர்மானிப்பதில் மக்கள் மத்தியிலிருந்து கிடைக்கப் பெறும் வடிவமாதிரிகளையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இலச்சினை எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய தங்கள் எண்ணக்கருவை ஒரு இலச்சினையாக வரைந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்குப் பிந்தாத வகையில் [05.01.2011] எமது செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் வடிவமாதிரிகளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலச்சினை அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகிறோம்.

தங்கள் இலச்சினை வடிவமாதிரியை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org

நன்றி.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான முறையில் இயங்கி வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சினால் இந்த விசாரணைங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து தமிழ்,சிங்களம்,மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்படும் குறித்த இணைய தளங்களினால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இணைய தளங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது யார்? இணைய தளங்களை செயற்படுத்துவது யார்? இவர்களுக்கும் சர்வதேச புலிகள் வலையமைப்பிற்கும் காணப்படும் தொடர்பு என்ன போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பத்திரிகை தனது பிரதான செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

sankamam.com

சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா

0 comments
50,000 வீடுகள் அமைக்கும் பணி தடைப்படமாட்டாது பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு
 கொழும்பு, டிசெ.20
வடக்கு, கிழக்கில் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டாலும் இந்தியாவின் உதவியுடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமெனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில்
தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றின் உதவியுடனான கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தும்படி டிசம்பர் 9ஆம் திகதி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் சார்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட புனர் நிர்மாணப் பணிகளுக்கும் நெற் களஞ்சியக் கட்டடங்கள் மற்றும் உற்பத்திகளைக் களஞ்சியப்படுத்தும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென்றும் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய கட்டடங்கள் நிர்மாணிப்பதை இடைநிறுத்துவதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது தான் கொழும்புக்கு வெளியே இருப்பதாகவும் இத விடயம் குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்க முடியாதெனவும் தெரிவித்த அவர் இந்திய உதவியுடனான 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அப்பணிகள் தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

uthayan

பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்

0 comments
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினரும் அதன் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி காலி பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆணைக்குழு உறுப்பினர்கள் பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகளை ஆராயவுள்ளதுடன் அவர்களின் விடுவிப்பு தொடர்பான சாத்தியங்களை ஆராயவுள்ளதாகவும் அதிகாரி மேலும் கூறினார்.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வெளிமாவட்டங்களில் நடத்தப்பட்டபோது தாம் அனைத்து தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏழாம் திகதி முதல் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளை புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, குறிப்பிட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் நடைபெறும் அமர்வுகளில் பொது மக்கள் கலந்துகொண்டு சாட்சியங்களை அளிக்கமுடியும். பொது மக்கள் பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ தங்கள் சாட்சியங்களை அளிக்கமுடியும் என ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார். ஏழாம் திகதி முதல் நான்கு தினங்களுக்கு இப்பகுதிகளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன.

மேலும் கொழும்பில் நடைபெற்றுவரும் ஆணைக்குழுவின் அமர்வுகளில் பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

tamilulakam.com

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை பிரித்தானியா மீண்டும் அழைப்பு

0 comments
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“ஸ்கை நியூஸ்“ தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில் பிரித்தானியாவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வெளியிட்டுள்ளார்.

“ கடந்த காலங்களில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகமான அக்கறையைக் காண்பிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுடனான உறவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாம் அவர்களைச் சந்தித்துப் பேசுவோம்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் லண்டன் வந்திருந்த போது அவரைச் சந்தித்துப் பேசியிருந்தேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.nerudal.c...udal.23882.html

காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நடேசனின் மகன் சாட்சியம் – நாடுகடந்த தமிழீழ அரசு

0 comments
இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், நாடு கடந்த தமிழீழ அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளிவராத போர்க்குற்ற ஆவணங்களை தகுந்த சாட்சியங்களுடன் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகனின் வாக்குமூலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் அவர்களின் மனைவியின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டுள்ளது.

நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தவை வருமாறு:

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தன்னுடன் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக சரணடைய முடிவெடுத்துள்ளதாகவும்தெரிவித்தார். இதுபற்றி ஐக்கிய நாடுகளின் ராசதந்திரகளுடன் கதைத்துள்ளதாக கூறினார்.

இன்னும் அரை மணித்தியாலயத்தில் தன்னோடு தொடர்பு கிடைக்கவில்லை என்றால் தங்களுடைய வாழ்வு முடிந்துவிட்டது என்று கருதுமாறும் கூறினார்.

எனது தந்தையுடன் புலித்தேவன் அவர்களும் இருந்தார். சரணடைந்த இவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் அழைத்துசென்றனர். அதனை பார்த்தவர்கள், இப்போதும் தாயகத்தில் வசித்துவருகின்றார்கள்.

ஐக்கியநாடுகள் சபை போதிய பாதுகாப்பு உத்தரவாதம் தரும் எனில் அவர்கள் நேரடியாக சாட்சியம் அளிப்பார்கள்.

- என தெரிவித்தார்.

இதேவேளை தளபதி ரமேஷ் அவர்களின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவனின் நிலையை தனக்கு தெரியப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுள்ளார்.

இத்துடன் தமிழீழ தாயகத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோசர்கள் மூலம் கிளறி அழித்தமை ஐக்கிய நாடுகளின் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும் அதற்கான உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=7094

Sunday, December 19, 2010

சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியேற்றப்படுகின்றது?

0 comments
சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு அதிக உதவிகள் தேவைப்படும் இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில்இருந்து செஞ்சிலுவைச் சங்க குழு அலுவலகம் மூட வைக்கப்பட்டிருப்பது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை அவமதிக்கும் ஒரு செயல்.

காணாமல் போன தமிழ் இளைஞர்களை கண்டுபிடித்து உறவினர்களோடு இணைத்து வைக்கும் பணியிலும் செஞ்சிலுவைச் சங்க குழு ஈடுபட்டு வந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திட்டமிட்ட வகையில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் அரசின் நோக்கத்துக்காகவே செஞ்சிலுவைச் சங்க குழு வெளியேற்றப்படுகின்றதா என்று பிரித்தானிய தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார உதவி அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பதில்கள் வழங்கினார். பிரித்தானிய அரசு இது குறித்து அறிந்து வைத்துள்ளது என்றும் – யுத்தத்துக்கு பிந்திய இந்நாட்களில் இலங்கை அரசு சொன்ன சொல் தவறாமல் நடக்க வேண்டும் என பிரிட்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

இதேசமயம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பாண அலுவலகமும் இவ்வாண்டின் இறுதியுடன் தனது முழுமையான செயற்பாடுகளை இடைநிறுத்துகின்றது. அடுத்த ஆண்டின் ஜனவரியுடன், அதன் பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

முன்னதாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் செயற்பட்டு வந்த செஞ்சிலுவைச் சங்க கிளை அலுவலகங்கள் படிப்படியாக பூட்டப்பட்டிருந்தது. தற்போது எஞ்சியிருந்த நல்லூர் கோவில் வீதியிலுள்ள அதன் யாழ். மாவட்ட தலைமை அலுவலகமும் மூடப்படுகின்றது.

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை

0 comments
பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்:  அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை

Posted Image
சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

“என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை தொடர்ந்தும் தாறுமாறாக விமர்சிக்கின்றது. நானும் முடிந்த மட்டும் பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிகை நிறுத்திக் கொள்வது நல்லது. அப்படியல்லாது என்னைப் பற்றி தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருந்தால் அதன் ஆசிரியர் என் கையால் தான் கத்திக்குத்து வாங்கிச் சாக நேரும்” என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொழும்பு-07ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பு அமைச்சில் நேற்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. அதன் காரணமாகவே நானாகவே சிலருக்கு சிலவேளைகளில் தண்டனை வழங்கியுள்ளேன். அதே நேரம் நான் இதுவரை எந்தக் குற்றமும் செய்ததில்லை.

எந்தவொரு பொதுமகனும் அரசாங்க நிறுவனமொன்றில் தனக்குத் தேவையான விடயத்தைச் செய்துகொள்ள முடியாது போனால் என்னை நாடி வரலாம். அதற்கான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் உதவி செய்கின்றார்கள். ஆனாலும் ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அவ்வாறான நிலையைப் போக்க நான் இருக்கின்றேன். என்னிடம் உதவி கோரும் ஊடகவியலாளர்களுக்கும் நான் உதவி செய்யத் தயாராக இருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
http://inioru.com/?p=18786

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்

0 comments
இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்




இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.


இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் என்றும்
தெரிவித்துள்ளது.



குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது இவர்கள் தான் என்றும், கருணா மற்றும் டக்ளசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டாம் என ராணுவத்தினருக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆணையிட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது

சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தொடங்கியுள்ளது தமிழ் கார்டியன்

0 comments
சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தொடங்கியுள்ளது - தமிழ் கார்டியன்

1. 2010 ஜூன் மாதம் ஐ.நா. பரிந்துரை குழு அமைக்கப்பட்டபோது அதை முழுமையாக எதிர்த்து சிங்களம். இது தமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் மீறுவதாக சொன்னது. குழுவுக்கு "விசா" அனுமதியை மறுத்தது.

2. சர்வதேச மனித அமைப்புக்களை அவர்களின் நல்லிணக்க ஆணைக்குழு மீதான கருத்துக்களை கண்டித்து சிங்கள அரசு ஐ.நா. சபை முன்னர் ஆர்ப்பாட்டம் செய்தது.

3. இப்பொழுது தாம் இந்த ஐ.நா. குழுவுக்கு அனுமதி தருவதாயும் அவர்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சந்திக்க அனுமதி தருவதாயும் சொல்லியுள்ளது சிங்களம்:
- பொருளாதார நெருக்கடி - ஜி.எஸ்.பி. ப்ளஸ் இழப்பு, இதனால் தொடரும் பொருளாதார பழு
- ஒக்ஸ்போட்டில் கண்ட அரசியல் அழுத்தம்
- அமெரிக்காவில் உள்ள மூத்த ஊடகவியாளர் எஸ்.எஸ்.திசநாயகத்தின் அமைதியான இராசதந்திரம் ( quite diplomacy)

காலம் தான் பதில் சொல்லும் சிங்களம் தான் சொன்ன சொல்லை காப்பற்றுமா என. பான் கி மூன் அவர்களே "நான் உண்மையாக நம்புகின்றேன் இந்த குழுவுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் "என ஒரு வித எதிர்பார்ப்புடன் சொல்லியுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேசமும் தமிழரும் கொடுக்கின்ற அழுத்தம் வேலை செய்கிறது. இது திருப்தி அளிக்ககூடியதாக உள்ளது.
1995 ஆம் ஆண்டு 8000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் 2004 ஆம் ஆண்டே சர்வதேசத்தால் இன படுகொலை என்று ஏற்றுகொள்ளப்பட்டது நினைவில் கொள்ளப்படவேண்டும்.

மூலம் : http://www.tamilguar...?articleid=2900
===================================================
Pressure on Sri Lanka begins to work

Sri Lanka’s new preparedness to allow a three-member expert panel on war crimes appointed by United Nations Secretary General Ban Ki-Moon to visit the country is clearly linked to international economic pressure and the diplomatic embarrassments recently suffered by President Mahinda Rajapakse’s regime, proving that - as we argued last week - only direct pressure can bring about Colombo's compliance with international norms, and that ‘quiet diplomacy’ is utterly ineffective.

Barely had Mr. Ban announced his appointment of the panel in June, Colombo reacted with characteristic vehemence. Declaring “Sri Lanka regards the appointment of the Sri Lanka Panel of Experts as an unwarranted and unnecessary interference with a sovereign nation,” the government vowed it would not issue visas to the three experts or otherwise cooperate.

The government also railed against the ‘colonialism’ of international human rights groups and encouraged noisy protests – including a hunger strike by a minister – outside the UN’s offices in Colombo. The government also launched its own ‘Lessons Learned and Reconciliation Commission’ – rightly slammed by international rights groups as “cynical attempt by Sri Lanka to avoid a serious inquiry that would bring genuine accountability.”

However, this weekend Colombo began to bow: “If a formal request is made by the UN Panel to visit Sri Lanka, the government will consider it,” External Affairs Ministry spokesperson Bandula Jayasekara said. Mr. Ban meanwhile said “after long consultations between myself and President Rajapaksa I am pleased that the Panel of Experts is now able to visit Sri Lanka and meet with the [LLRC].”

It is clear the climb-down is consequent to both the economic pressures - such as the withdrawal of the EU's trade subsidies - as well as the stinging humiliations suffered by President Rajapaksa during his recent visit to London. For all the self-satisfied hectoring about ‘sovereignty’, it was only a matter of time before reality began to bite the heavily indebted state.

As veteran Tamil journalist J. S. Tissainayagam, who was released from Sri Lankan government custody and allowed to leave the country earlier this year - also after international pressure- said recently, “the more shaming that is done, the more pressure that is put is put publicly, the more the government is willing to act.” Conversely, ‘quiet diplomacy’, as he also said, does not make Colombo more receptive to international demands.

It very much remains to be seen if Colombo will follow through and allow the UN panel to visit and properly conduct its inquiries. As Mr. Ban himself noted, “I sincerely hope that the Panel of Experts will be able to have good cooperation [from Sri Lanka], to have an accountability process and make progress as soon as possible.” Moreover, it is not clear what is served by the UN panel meeting Sri Lanka’s sham commission.

Nonetheless, the community of international and Tamil actors who have been actively seeking an international investigation into Sri Lanka’s war crimes can take satisfaction that their efforts are paying off. There is no doubt justice will be a long time coming for the genocidal slaughter of Tamils in 2009 – and the many war crimes and crimes against humanity inflicted before, and since, then. (It is worth remembering that whilst Serb forces massacred 8,000 Bosniak civilians in 1995, this was only recognised by international community as an act of genocide in 2004.) But with Sri Lanka beginning to buckle under international pressure, the campaign for accountability should be stepped up.

Concomitantly, the war crimes-related evidence against President Rajapakse and Sri Lanka’s other top civilian and military leadership is mounting. Quite apart from details being gathered from victims and collated by international actors, both governmental and non-governmental, and the data accumulated by the UN even as the mass killings were conducted in the closing months of Sri Lanka’s war, the Wikileaked US cables recently made public also offer new leads and avenues of inquiry.

ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்

0 comments
புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாராரின் ஆதரவைப் பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்று கூறி கொள்ளும் அமைப்பானது இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை ஐ நா நிபுணர் குழுவிடம் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இறுதிப் போரின் போது நடந்த விடயங்கள் குறித்து வந்த ஊடகத் தகவல்களையும், இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் தாம் ஐ நா குழுவிடம் அளித்துள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசைச் சேர்ந்த டிலக்ஸன் மொரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை போர் குறித்து சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று தமது அமைப்பு தொடர்ந்து கோருவதாகத் தெரிவித்த அவர், தம்மிடம் ஆதாரம் அளித்தவர்களின் விபரங்களை பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என்றும் கூறினார்.

http://www.bbc.co.uk...crimecomp.shtml

Thursday, December 16, 2010

இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)

0 comments
இலங்கையில் தேசிய மலராக நீல அல்லி (நீலோற்பலம்) என சரியாகப் பெயர் குறிபிடப்பட்டாலும் அதற்கெனப் பயன் படுத்தப்படும் மலரின் படம் பிழையானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

இச் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளவர் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தியகன்தாவலயும், வயம்ப பல்கலைக்கழகத்தின் தாவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கபில யகன்தாவலயுமாகும்.

இலங்கையின் தேசிய மலராக 1986 ஆம் ஆண்டு முதல் பிரகடணப்படுத்தப்பட்ட நீல அல்லி மலருக்கு பதிலாக இலங்கையின் அரச இணையத் தளங்களிளும் பாடசாலை பாடப் புத்தகங்களிலும் ஏனைய அரச ஆவனங்களிலும் பிழையான ஒர் காட்டு மலர் காட்டப் பட்டுள்ளதாகவும் அது வெளி நாட்டிலிருந்து அறிமுகம் செய்யப் பட்டதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தி யகன்தாவலயும் வடமேல் மாகாண (வயம்ப) பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான கபிலயகன்தாவலயும் தெரிவிக்கின்றனர்.

முன்னர் நில்மானெல் என்றழைக்கப்பட்ட அம்மலர் தற்போது 'நவுச்சலீ" என்ற பெயரில் அழைக்கப் படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக பேராதெனிய பல்கலைகழகத்தின் தாவரவியல் பேராசிரியர் தீப்தி யகன்தாவல கூறுகின்றார்.

இலங்கைக்கு பொறுத்தமான மலர் ஒன்றினையே தேசிய மலராக அறிமுகம் செய்த போதும் தவறான மலர் ஒன்றின் படத்தையே பிரசுரம் செய்து வந்துள்ளதாகவும் கூறுகின்றார்.

இலங்கையில் உள்ள தற்போதைய ஆவனங்களில் குறிப்பிடப்படும் நீல அல்லி பூவின் படம் பிழையானதாகும். அது கூடுதலான ஊதா வர்ணத்தைக் கொண்டது.

ஆனால் உண்மையான நீல அல்லி பூ இளம் வர்ணமுடையது என்றும் பேராசியிர் தீப்தி யகன்தாவல மேலும் கூறிகின்றார்.

பிழையான பூவையும் சரியான பூவையும் இங்கு தரப்பட்டுள்ளது. சரியான பூ இளம் வர்ணமுடையதாகும்.

பிழையான பூ

Posted Image

உண்மையான நீல அல்லி பூ


Posted Image

தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெல உறுமய

0 comments
அரச வைபவங்களில் சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சட்டவிரோதமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய கீதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருப்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடாகும் எனவும் கண்டித்துள்ளது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பாக இன்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநாகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்.

வண எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதற்கமைய எமது நாட்டில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும். தமிழில் இசைப்பதை அனுமதிக்க முடியாது.

அவ்வாறெனில் எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட வேண்டுமென கேட்பார்கள். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களது தேசிய மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படும் போது தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலமும் தமிழில் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமாகும். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாம் இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.

அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

0 comments
அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த படகு விபத்தில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி மரணம்

நேற்றுக்காலை அவுஸ்த்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த அகதிகள் படகு விபத்தொன்றில் 30 இற்கும் மேற்பட்ட அகதிகள் நீர்ல் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து சுமார் 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்த்திரேலிய நோக்கி வரும்போதே இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்த்துமஸ் தீவை நெருங்கிவிட்ட நிலையில் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக படகு பாறைகளுடன் மோதியதில் அது சிதறுண்டு அகதிகள் அனைவரும் கடலினுள் விழ்ந்ததாகவும் குழந்தைகள் பெண்கள் உற்பட 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழக்க ஏனையோரை அவுஸ்த்திரேலியக் கடற்படை காப்பாற்றியுள்ளது. படகிலிருந்த குழந்தைகள் அனைவரும் நீரில் மூழ்கிப் பலியாகியிருக்கிறார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் எத்தேச்சையாக அப்பகுதியில் தனது விவரணப் படமொன்றை எடுத்துக்கொண்டிருந்த அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த அவலத்தை முழுவதுமாக தனது வீடியோவில் பதிவுசெய்துள்ளார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்த அவலம் நடைபெற்றபோதும் கடும் கடல்க் கொந்தளிப்புக் காரணமாக பாறைகள் நிறைந்த அந்த ஆழ்கடல்ப் பகுதியை யாராலும் நெருங்கமுடியவில்லை. இறுதியில் அவுஸ்த்திரேலியக் கடற்படை சிறிய தரையிறங்குப் படகுகளில் அவ்விடத்தை அடைந்து நீரில் தத்தளித்தோரைக் காப்பாற்றியது.

தற்போதைய அரசின் கடுமையான அகதிகள் கொள்கையினால்த்தான் இந்த அவலம் ஏற்பட்டதாக அகதிகளுக்காக குரல் கொடுத்துவரும் பல அமைப்புக்கள் அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிப் பிரதமரும் தனது வெளிநாட்டுப்பயணத்தை இடைநடுவே முறித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பியுள்ளார். வழக்கமாக அரசை அகதிகள் பிரச்சனையில் பிளந்து கட்டும் எதிர்க்கட்சியும் தற்போது அடக்கி வாசிப்பதோடு, விவாதம் செய்வதற்கு இது தருணம் அல்ல என்றும் சொல்லியிருக்கிறது.

Wednesday, December 15, 2010

அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும் பாடம் (THE BATTLE OF ALGIERS)

0 comments
விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை.

இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன.

அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த மண்ணை ஒரு இனம் மீட்கவில்லையா?

தோல்விகள் வெற்றியை நோக்கிய போராட்டங்களை ஒத்திப் போட்டிருக்கிறதேயொழிய, முடக்கி விடவில்லை. ரஷ்யாவில் 1905ல் என்ன நடந்தது? க்யூபாவில் ஜூலை 26 இயக்கம் எதைச் சொன்னது?

ஒவ்வொரு போராட்ட வடிவமும் அடக்கப்படும் போது, இன்னொரு வடிவம் பிறக்கிறது.

அந்த வடிவம் தோற்றுப் போனால் இன்னுமொரு வடிவம். காலம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.

கற்களைக் கொண்டு வேட்டையாடிய சமுதாயம், இன்று ஏவுகனைகளைக் கொண்டு அணு ஆயுதங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.

அன்று மக்கள் சண்டையிட்டார்கள், இன்று அரசாங்கம் போர் செய்கிறது.

அன்று தொட்டு இன்றுவரை ஆதிக்க வெறி இருந்துதான் வருகிறது, அன்றிலிருந்து எதிர்ப்பும் இருந்தே வருகிறது. எதிர்ப்பின் வடிவங்களில் மாற்றம் மட்டுமேயிருக்கிறது, எதிர்ப்பேயில்லாமல் போனதில்லை.

ஆதிக்கம் இருக்கும் வரை அதை எதிர்க்கும் கலகக் குரல்களும் இருந்தே தீரும்.

இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களை புரட்டும் போது கிடைக்கும் தகவல்.

அப்படியொரு வரலாற்று நினைவு கூறலை அல்ஜீரியப் போராட்டம் – The Battle Of Algiers (1964) படமும் கூறுகிறது. வரலாறு கற்றுத்தரும் அத்தனை பாடங்களையும் இந்த படம் பதிவு செய்துவிடவில்லை. ஆனால், அல்சீரியப் போராட்டத்தின் படிப்பினைகளை இந்த படம் படம்பிடித்திருக்கிறது.


பிரான்ஸின் ஆதிக்கத்திலிருக்கிறது அல்சீரியா, அடக்குமுறையிலிருந்து தேசத்தை மீட்க FLNஎன்னும் ஆயுதமேந்திய விடுதலைப் போராளிக்குழு இருக்கிறது, இக்குழு தனிநபர் பழிவாங்கலில் இருந்து தாக்குதலைத் துவங்கும் விதமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரிகளைக் கொல்கிறார்கள், பதிலுக்கு ராணுவ அதிகாரியொருவன் அல்ஜீரியர்களின் குடியிருப்பில் வெடிகுண்டை வைக்கிறான், மீண்டும் பழிவாங்கல், பாதுகாப்பு பலப்படுத்தல், பெண்கள் ஆயுதங்களைத் தூக்கிவர மீண்டும் பழிவாங்கல், இந்த பழிவாங்கல் கூட ஒரு விடுதலைப் போராட்டமாகவே வடிவம் பெற, மீண்டும் பலத்த பாதுகாப்பு, பிரெஞ்சுப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பிரெஞ்சு மக்கள் புழங்குமிடங்களில் வெடிகுண்டு வைக்கிறார்கள், நிலைமை தலை விரித்தாட, ஒரு கொடக்கண்டன் ராணுவ தளபதியாக வருகிறான், அவனுடைய திட்டமிடல் துவங்குகிறது, மக்களை அமைதியான முறையில் ஒரு வாரம் வேலைநிறுத்தத்திலீடுபட FLN குழு அறிவிக்க, மக்களும் சொல்பேச்சு கேட்கிறார்கள், ஆதிக்கவெறி தலைக்கேறி, வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் துப்பாக்கி முனையில் இழுத்து வந்து, ஒரு வார காலம் போராடி, வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வேளையில், FLN குழுவினர் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, நான்கு பேர் மட்டுமே தப்பிக்கிறார்கள், அவர்களும் படிப்படியாக ஒவ்வொருவராக மாட்டுகிறார்கள், இரண்டு வருடங்கள் காயடிக்கப்பட்ட மக்கள், திடீரென பொங்கியெழுகிறார்கள், ராணுவ ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள், அவர்களின் போராட்டம் சில ஆண்டுகள் நீடிக்க, ஆதிக்கம் அகல்கிறது, சுதந்திரம் பிறக்கிறது. (சுதந்திரமடைவது படத்தில் காட்டப்படுவதில்லை, சொல்லப்படுகிறது)

முற்றுப்புள்ளியில்லாமல், மூச்சுவிடாமல் ஒரு பத்தியிலடங்கிவிடக்கூடிய கதைதான், (மேலே சொன்னதைப் போல) ஆனால், உண்மை வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில், இந்த படம் சொல்லும் பாடம் மகத்தானது. இந்த படம் முழு போராட்ட வரலாற்றையும் பதிவு செய்யவில்லை, போராட்டத்தின், போரின் நிகழ்வுகளை மட்டுமெ சொல்கிறது.ஒரு போராட்ட வடிவம் அடக்கப்படும் போது, போராட்ட வடிவங்கள் மாறுமென்பதைப் போல், அல்சீரிய மக்கள் முதலில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட, அடக்குமுறைகள் அதிகமானதால், போராட்ட வடிவம் ஆயுதந்தாங்கியதாக மாறியது, அமைப்பு அழிக்கப்பட்டதும் (படத்தில்) மீண்டும் மக்களே தங்கள் கைகளில் போராட்டங்களை எடுத்துக் கொண்டனர்.

கல்லெறியும் போராட்டமாகவும், ஓலமெழுப்பும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது. உலகமுழுவதும் அல்சீரியப் போராட்டத்துக்காகக் கலகக் குரல்கள் பலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஆல்பெர்ட் காம்யூ, ழான் பால் சர்த்தாரினுடைய குரல்கள் முக்கியமானவை. (காம்யூவை அல்சீரிய போராளிகள் அவருடைய சில கருத்துக்களால் எதிர்த்தனர்)


இந்த படம் பல வகையிலும் நம் கண் முன்னே ஈழப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. அடக்குமுறை ஏவப்படும் போது, ஆண், பெண், சிறுவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஏவப்படும் போது, எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லோருமே ஆயுதமேந்ததான் செய்வார்கள். அடக்குமுறை எதன் பெயரால் வந்தாலும் சரி, அது நிறத்தாலோ, மதத்தாலோ, கடவுளின் பெயராலோ, ஒடுக்கப்படுபவர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள். தங்களிடம் கிடைக்கக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள், அது கல்லாகவும் இருக்கலாம், கழுதை சாணியாகவும் இருக்கலாம், அல்லது குலவையிடும் வாயாகவும் இருக்கலாம். ஓலமிட மட்டுமில்ல எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தங்கள் குரலைப் பயண்படுத்துவார்கள் என்பதை இப்படத்தின் இறுதியில் காணலாம்.

கருவிலிருக்கும் குழந்தையின் மீது கூட அடிமை முத்திரை குத்தப்படும் போது வாய் திறக்காத புணிதப் பசு மௌனிகள், ஒரு சிறுவன் ஆயுதமேந்தி போராடும் போது, இவங்கள பாத்தீங்களா, சின்ன சின்னப் பசங்க கையில் ஆயுதத்தைக் கொடுத்து போராடச்சொல்றாங்க, இவா எல்லாம் போராளிகளான்னு வாய்கிழிய கத்த வந்துடுவாங்க. அப்படி ஒரு காட்சியாக, வேலை நிறுத்தத்தை ஒடுக்க ராணுவம் வீடுகளுக்குள் புகுந்து ஆட்களை இழுத்து வரும்போது, ஒரு பிஞ்சுக்குழந்தை மலங்க மலங்க விழிக்கும், ஆதரவற்று நிற்கும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ராணுவ அதிகாரி ஒருவர், மக்களே பயப்படாதிர்கள், அந்த தீவிரவாத குழுவிடமிருந்து உங்களைக் காக்கவே பரம்பிதா உருவத்தில் நாங்கள் வந்திருக்கிறோம், புத்தம் சரணம் கச்சாமி, யுத்தம் சரணம் கச்சாமி, ரத்தம் சரணம் கச்சாமி… என்று மைக்கில் ஓலமிட்டு கொண்டிருக்க, ஒரு சிறுவன் அவர்களுக்குத் தெரியாமல், அந்த மைக்கை எடுத்துச் சென்று இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறான், இயக்கத்தின் காய் நகர்த்தல்களில் அவனுடைய பங்கும் இருக்கிறது. படத்தின் இறுதி வரையிலும், அந்த சிறுவன் வந்து கொண்டிருப்பான்.

இயக்கம் அழிந்த பிறகும் தன்னெழுச்சியாக மக்கள் சில காலத்திற்குப் பிறகு கொதித்தெழும் போது, பிரெஞ்சு ராணுவம் தன் ஆதிக்கத்துக்கு சாவு மணியடித்துக் கொண்டு கிளம்பும். நம்பிக்கை கிளை துளிர்க்கிறது.

முத்தமிழ்வேந்தன்
சென்னை

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15)

0 comments
இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு ‘இனி’ என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.“சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா” என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது. எம் நிலைப்பாடும் அதுவே.

உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவோம் ..

பதிவு : பூராயம் வன்னியன்

அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் 2010 (காணொளி)

0 comments

ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக்குழு அமைக்க கோருங்கள்

0 comments
ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக்குழு அமைக்க கோருங்கள்

இங்கே சொடுக்கவும்: http://www.congressw...ttergroupid/105

அனுப்பும் செய்தி ( Message )

I hope you will hear my story. I have family and friends that were wounded or killed by the Sri Lankan military offensive during the first five months of 2009. For decades, stories of Tamil suffering have been silenced by Sri Lanka's state oppression and intimidation. Due to Sri Lanka's culture of impunity and the international community's indifference to the plight of the Tamils, the deaths of my loved ones remain unaccounted for. I am urging you to act on the behalf of those whose lives were lost. Please recommend the Secretary General immediately initiate a full investigation into Sri Lanka's war crimes. This investigation would finally penetrate the cloak of silence surrounding the deaths of my loved ones.

Since Sri Lanka's independence, Tamils have an extensive history of systematic discrimination and genocidal assault. From past disenfranchisement to anti-Tamil riots, Sri Lanka has built a foundation in which Tamils are prevented from participating in crucial aspects of society. More recent food and medical embargoes, assault on press freedom, and coercive and violence tactics against humanitarian aid workers have highlighted the genocidal intent of Sri Lanka's government. The final indiscriminate military offensive was the culmination of decades of communal violence and state-sponsored racism towards Tamils. A UN official estimated between 10,000-40,000 deaths during the final days of the war in May, 2009.

Some of those deaths belong to family and friends of mine. Please ensure that their deaths do not remain ignored. Retribution and justice is crucial to securing peace for the Tamil population. Human rights organizations and democratic nations have called for an independent investigation into war crimes and crimes against humanity. Please join us in our search for peace and justice.

Sincerely,

Tuesday, December 14, 2010

ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம். ஆனால் வரும் தேர்தலில் நிற்போம். சீமான்

0 comments
நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைபடி இன்று காலை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டார்.

அங்கு சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை வைக்க வேண்டும். இனி இதைவிட பெரிய ஊழல் வந்தால்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறையும். சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் தாக்குகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நாங்களாக யாருடனும் கூட்டணிக்கு தூது போகமாட்டோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து போட்டியிடுவோம். இந்த இயக்கம் ஆட்சியில் அமர உருவாக்கப்படவில்லை. தமிழர்களுக்காக உருவானது. வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.


சிறையில் இருந்ததால் பயப்பட்டீர்களா? என்று கேட்கிறீர்கள். பயம் என்பது சீமானுக்கு கிடையவே கிடையாது. சிறையை கண்டு அஞ்சுபவன் நான் இல்லை. பயப்படுபவன் தமிழனே கிடையாது.

எங்களின் அடுத்த கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை

0 comments
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது.அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.


இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும்.

இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை.ஆனாலும்,தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது.

ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்‌ஷே தற்பொழுது வந்துள்ள நிலையின் காரணமாக தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுவதை அதிபர் ராஜபக்சே ரத்து செய்து உள்ளார்.ஏற்கனவே தமிழர்களின் தாயகத்தை தமிழர்களிடம் இருந்து பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களர்கள் இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின் உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு.எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம்.இங்கு சிங்களர்கள் மட்டும் தான் வாழ முடியும்,தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய கண் துடைப்பான இலங்கைப் பயணமும்,தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைக்கு தராது என்ற சிவசங்கரனின் பேட்டியுமாகும்.சிங்களத்தின் இந்த போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்,தொடரும் ராஜபக்‌ஷேவின் சிங்கள இனவெறியை டெல்லிக்கு கடமைக்கு அனுப்பப்படும் கண்டன கடிதங்கள் எக்காலத்திலும் முடிவுக்கு கொண்டு வராது என்பதை இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமே சிங்கள இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதை சமீபத்தில் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக லண்டனில் நடந்தேறிய ஒன்றுபட்ட போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.

மேலும் எம் ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி நம் போராட்டப் பயணம் தொடரும்.

தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு

0 comments
தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள்.

இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது.

மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைக்காமல் தடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்று மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி.

பொது வைபவம் ஒன்றில் தமிழில் தேசிய கீதம் பாட தயார் நிலையில் வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்களை இராணுவ அதிகாரி ஒருவரால் சில மாதங்களுக்கு முன் பாட விடாமல் தடுத்து விட்டார் என்று சங்கரி நினைவு கூர்ந்தார்.

கிளிநொச்சி தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் ஒன்று-இந்நிலையில் இங்கு சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக இராணுவம் உள்ளது- இந்நடை முறை அங்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் இவர்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் நமோ நமோ தாயே என்று தமிழில் தேசிய கீதம் இருந்து வருகின்றது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசமைப்பில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தாலும் கூட நடைமுறையில் தமிழிலும் இசைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ப் பாடசாலைகளில் கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகள் எவையும் இல்லாமல் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்கிறார் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்.

ஆர் பிறேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றுக்கு வருகை தந்திருந்தார் என்றும் அவ்வைபவத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது என்றும் இவர் தெரிவித்தார்.
tamilcnn.

Monday, December 13, 2010

தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் கனேடிய இணையத்தளம் கருத்து..

0 comments
தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் - கனேடிய இணையத்தளம் கருத்து..!

[ பிரசுரித்த திகதி : 2010-12-13 05:34:19 AM GMT ]

இலங்கையின் தேசிய கீதம் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை, சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனநாயக இலங்கையில், பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரித்தானியாவில் பல்வேறு அவமானங்களின் பின்னர், இலங்கை வந்து நடத்திய முதலாவது அமைச்சரவை மாநாட்டின்போது இந்த தீர்மானத்தை அறிவித்தார்
.
இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியதாக த சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இது கடந்த 1948-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4-ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என இதுவென அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் யுத்தம் நிறைவடைந்து தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தனி சிங்களமொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில், அது சர்வதேச ரீதியாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும், வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்தி வைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன கோதபாய

0 comments
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய :
13 டிசம்பர் 2010

இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் ..
புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய :

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடற்படையின் 60 ஆண்டு பூர்த்தி விழாவில் உலகின் பல முக்கிய நாடுகள் பங்குபற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒருபோதும் கடற்படை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் சீனாவும், ரஸ்யாவும் இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சிரேஸ்ட அதிகாரிகளை இந்த நிகழ்விற்காக அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்றிருந்தால் இந்த ஐந்து நாடுகளும் கடற்படை ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உலகின் பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அனுமதி வழங்காது கப்பல்களும், உயர் படையதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டிருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளமை புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகடந்த பயங்கரவாதத்தை முறியடிப்பது தெடர்பான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்த நீர் நவாலியில் சம்பவம் பீதியால் மக்கள் ஓட்டம்

0 comments
நவாலி, டிசெ. 13
வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர்.
நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார்.
நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்துக் கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அச்சுறுத்தும் இயற் கைச் சீற்றம் இடம்பெற்றது.

""நண்பகல் 12.50 மணியளவில், பெரும் உறிஞ்சு குழல் வைத்து உறிஞ்சுவது போன்ற போன்ற சத்தம் கேட்டது. வழக்கையாற்றுப் படுக்கைக்கு அருகில் இருந்த வயல் நிலங்களில் இருந்த நீர் திடீரென வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று பெருஞ் சுழலா கப் பாய்ந்தது. இதனால் வானத்துக்கும் நிலத்துக்கும் இடையில் கரும்புகை வடிவிலான ஒரு நூல் தொடுப்பு ஏற்பட்டது' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
""வானில் றொக்கெட் சென்றால் ஏற்படும் அடையாளம் போன்று அது இருந்தது' என்றார்றொருவர்.
சுமார் அரை மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வான் நோக்கி உறிஞ்சப்பட்டது எனப் பிரதேசவாசிகள் கூறினர்.
சூறாவளி போன்று நீர் வான் நோக்கி இழுக்கப்பட்டதைக் கண்ட, வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் பயத்தில் வீதிகளுக்கு விரைந்தனர். சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயர்வதற்கும் ஆயத்தமாகினர்.

எனினும் துணிச்சல் மிக்க இளைஞர்கள் சிலர் தண்ணீர் வான் நோக்கி இழுக்கப்படுவதை அருகில் சென்று தமது கமெரா மொபைல் போன்கள் மூலமாகப் பதிவு செய்தனர்.

விடயம் காட்டுத் தீ போலப் பரவியதில் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் கடல் உள்வாங்கிக் கொண்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இது குறித்த விசாரிப்புக்களும் வந்தன.
இதற்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் இப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இந்த விநோத இயற்கைச் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:

இவ்வாறான சம்பவம் சாதாரணமாகவே இடம்பெறக் கூடியது. இதனை மினி சூறாவளி என்று கூறலாம். கடலிலும் தரையிலும் இது ஏற்படலாம்.
வளிமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இவ்வாறான மினி சூறாவளிகள் ஏற்படுகின்றன. கடந்த இரு தினங்களாக அதிக வெப்பநிலை நிலவியது. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சூறாவளிகள் உயிர் மற்றும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

uthayan

தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?

0 comments


எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!

 முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.

தனது கடமையில் இருந்து தவறிக ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின்; பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் செய்த ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் விடுத்த கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள்; நடைமுறைபடுத்தப்பட்டனவா என்பது தொடர்பாக ஆராயவுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க சிறீலங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த போதும் அதனை மீறி ஐ.நா. அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இது இராசதந்திர மட்டத்தில் சிறீலங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த யூலை மாத முற்பகுதியில் ஐ.நா.வின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பௌத்த தேரர்கள் புடை சூழ சாகும்வரை உண்ணாநோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் ஐ.நா.தூதுவராலயத்தை நாள்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீலங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர் குழுவை எதிர்த்து ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது. அதில் ஐ.நா.பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. .

சிறீலங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது. இந்த குழுவுடன் எந்தவொரு தொடர்பையும் பேணப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது..

இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கூடிய இக்குழு தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக வெளியில் இருந்து கருத்துக்களை பெறவிரும்பி ஒரு அறிவுறுத்தலை கடந்த ஒக்டோபர் 14ஆம் நாள் வெளியிட்டது. அதில் சில அறிவுறுத்தலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்களை, முறைப்பாடுகளை செய்ய விரும்பும் முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

இது ஒரு ஆவணம் பிரதி எடுக்க [ நன்றி தமிழ் நெற்]கருத்துக்களை, முறைப்பாடுகளை அனுப்பி வைப்போர் தமது தொடர்பு விபரங்களை தவறாது குறிப்பிடுமாறும் வேண்டப்பட்டுள்ளனர். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே சிறந்தது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வசதியைப் பெற்று ஆங்கிலத்திலேயே அனுப்புதல் சிறந்தது.

யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் இங்கு தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். சுயாதீனமான சர்வதேச நீதிவிசாரணையே இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த பேரவலத்திற்கு தீர்வாக அமையும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்துவதே இங்கு மக்கிய கருதுகோளாகும். சிறீலங்கா ஆட்சியாளர்களால் அமைக்கப்படும் எந்த விசாரணைக்குழுவும் அதற்கு பரிகாரமாக அமையாது என்பது பலதரப்பாலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிலும் உலகறிந்த தலைவர்கள் பலர் இக்கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • Archbishop Desmond Tutu, chair of The Elders, David Cameron, British Prime Minister, Navaneetham Pillai, United Nations high Commissioner for human Rights, Kofi Annan, Former UN Secretary-General, Jimmy Carter, 39th President of the United States of America, Nelson Mandela, Former President of South Africa, Mary Robinson, Former Irish President and former UN high Commissioner for human Rights, Madame Louise Arbour, President and CEO, International Crisis Group, Fernando henrique Cardoso, Former President of Brazil, Kenneth Roth, Executive Director, human Rights Watch, Salil Shetty, Secretary General, Amnesty International, Martti Ahtisaari, Former President of Finland and international mediator, Lakhdar Brahimi, Former Algerian Foreign Minister and former UN envoy, Grafa Machel, Former Minister of Education and Culture in Mozambique.
இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.
  • அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்

    ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்

    இ) தமிழர் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள், தொழில்சார் வல்லுனர்கள் எனத் தமிழர்கள் அனைவரும், அமைப்க்களாகவும், தனிநபர்களாகவும் எழுதலாம்.

    ஈ) தமிழர் இல்லாதோர், அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் புரியும் சகநண்பர்கள், சேர்ந்து கல்வி கற்கும் கச நண்பர்கள், கல்விமான்கள், தொழிற்சந்க வாதிகள் எனத் தமிழர் இல்லாதோர் அனவரையும் எழுத வைக்கலாம்.
ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org

இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.


அனுப்பி வைப்பதற்கான காலக்கெடு: டிசெம்பர் 15, 2010
முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு பிரதியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org ) வைக்கலாம்.

சிறீலங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றை ஐ.நா.அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தல்.

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. நாம் அனைவரும் எழுதுவதுடன் ஏனையவர்களையும் எழுத வைப்போம். சர்வதேச விசாரணை அமைய விரைந்து எழுதுவோம். உதவிகள் தேவைப்படின் 416-628-1408 என்ற தொலைபேசி இலக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தை அழைக்கவும்.
தொடர்புபட்ட ஒலி,மற்றும் ஒளிப்பதிவுகளின் இணைப்புக்களையும் சேர்த்து அனுப்பவும்
மீண்டுமோர் காணொளி வெளிவந்துள்ளது.
உள ரீதியாக பாதிப்படையக் கூடியவர்கள் மற்றும் சிறுவர்கள் இக்காணொளியை பார்ப்பதை தவிர்க்கும்படி வேண்டுகிறோம்.
 (முழுமையான காணொளி)
http://www.livestream.com/valarylive/video?clipId=flv_113661e2-e9e2-4c39-a2f9-534db641a029
 (சனல் 4 இன் இது தொடர்பான செய்தி)
http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்

0 comments
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள்ளன. இந்தியாவில் முதன்மை அரசியல் கட்சிகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்துகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்ற தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை போன்றோர் இலங்கையில் சமாதானம் நிலவுவதை நிராகரிக்க மாட்டார்கள்.

இலங்கையில் பயங்கரவாத்தை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து சிவ்சங்கர் மேனனிடம் வினவப்பட்ட போது, இலங்கை முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்றதாக அவர் பதிலளித்துள்ளார். இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என்பதை கூறமுடியும் என தெரிவித்துள்ள அவர், அது வேறெங்கும் இருந்தல்ல இலங்கைக்குள் இருந்தே வரமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மானம் கெட்டவங்க மட்டும் வெளி நாட்டுல மலையாளிய அடிக்குறாங்க, குசராத்திய கொல்றாங்க ன்னு சத்தம் கொடுத்து ஓடுறாங்க நாங்க எம் மக்களை அடிப்பது பற்றி கவலை கொள்ள கூடாதாம்

மலையாள தே ........ பசங்க

என்னடா கேக்க ஆளில்லைன்னு எனனவேன்ன பேசலாம்னு நினைப்பு

இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

0 comments
இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த கோவில்களை கட்டி வருகின்ற நிலையிலும் தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இது மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலக்கட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணிக்கும் செயலாகவே பாhக்கக் கூடியதாய் உள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை ஒரு கலாச்சார படுகொலைக்குள் தள்ளுகின்ற நிகழ்ச்சியாகவே தோற்றமளிக்கின்றது.

அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.

இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம். அமைச்சரவையில் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை மேற்கொண்ட போது வெளிநாடுகளில் தேசிய கீதங்கள் ஒரு மொழியில் மட்டுமே உள்ளதாகவும் இந்தியாவில் ஹிந்தி மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் விமல் வீரவன்ச உட்பட அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

உண்மையில் அவர்களுக்கு உலக நடப்புக்கள் குறித்த தெளிவு எதுவும் இல்லை என்பதால் சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம், இந்திய தேசிய கீதம் ஹிந்தி மொழியில் எழுதப்படவில்லை. அதனை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர், அவர் இந்தியாவின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான வங்காள இனத்தினைச் சேர்ந்தவராவார். அவர் எழுதிய வங்காளி மொழியிலேயே இந்திய தேசிய கீதம் உள்ளதையும், இந்தியாவின் முதன்மை மொழிகள் பல இருக்கும் நிலையில் சிறுபான்மை இனம் ஒன்றிற்குச் சொந்தமான மொழி ஒன்றிலேயே அங்கு தேசிய கீதம் இசைக்கப்படுவதையும் அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை கனடாவில் மூன்று மொழிகளிலும், சுவிட்ஸலாந்தில் நான்கு மொழிகளிலும், தென் ஆபிரிக்காவில் ஐந்து மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. சரியான காரணங்கள் இன்றி பொருத்தமற்ற நேரத்தில் இனவாத நோக்கில் தேசிய கீதத்தினை சிங்களத்தில் இசைக்க சொல்வதானது தமிழ் பகுதிகளை சிங்கள மயப்படுத்த எடுக்கும் தமிழருக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். இந்நடவடிக்கையானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையையோ புரிந்துணர்வையோ கொண்டு வரமாட்டாது என்பதுடன் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்களை குழப்பங்களை தொடர்ச்சியாக வைத்திருக்கவே இது உதவும் என்ற காரணத்தாலும் இந்நடவடிக்கையினை உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் பா.உ
பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு.