Saturday, April 24, 2010

நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டும்:சீமான்

0 comments

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.



பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான்,

’’இனி எந்த காலத்திலும் சிதம்பரம் சிவகங்கையை ஜெயிக்க முடியாது. நான் இருக்கும் வரை சிதம்பரம் சிவகங்கையை மறந்துவிட வேண்டியதுதான்.


கனடாவில் என்னை திருப்பி அனுப்பும் போது ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறாயா என்று சீக்கியன் கேட்டான்.



நியாயப்படுத்தவில்லை அமைதிப்படை என்ற பெயரில் என் உறவுகளை சீரழிக்க அனுப்பியவர் என்றுதான் கூறுகிறேன் என்று பதிலளித்துவிட்டு, இந்திராகாந்தி கொலையை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா என்று சீக்கியனிடம் கேட்டேன்.அமைதியாகிவிட்டான் அந்த சீக்கியன்.

இது எல்லாமே ப.சிதம்பரத்திற்கு தெரியாமலா நடந்தது. காங்கிரஸ் கட்சியை அம்பலத்துவதே என் நோக்கமும் அதுவே தமிழின விடுதலையாகும்.



என்னை சிறையில் அடைத்தால் கைதிகள் எல்லோரையும் நாம் தமிழர்கள் ஆக்கிவிடுவேன். இன்னும் 2 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர்கள் ஆக்குவோம்’’என்று பேசினார்

வான் புலிகளின் இரணைமடு ஓடுபாதையை இந்திய வான்படை பாவிக்கின்றது!

0 comments

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பாவித்த கிளிநொச்சி இரணைமடு வானூர்தி ஓடு பாதையை இந்திய வான் படையினர் தற்பொழுது பாவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வானூர்தி தளத்தை இந்திய அரசிடம் சிறீலங்கா அரசு கையளித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள வான் படைத் தளபதிகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு கீழ்நிலை படை அதிகாரிகளோ, படையினரோ செல்லுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வானூர்தி தளத்தில் இருந்து இந்திய வான் படையினர் இந்தியாவிற்கு நேரடியாகப் பயணம் செய்து வருவதுடன், இந்தியாவில் இருந்து செல்லும் இந்தியப் படையினர் சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கியும் வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இரணைமடு காட்டுக்கள் அமைத்திருந்த இந்த வான்படைத் தளம் தொடர்பாக படைத்துறை ஆய்வாளர்கள் தமது வியப்பை வெளியிட்டிருந்தனர்.

அண்மையில் இரணைமடுவில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியின்போது பலர் உயிரிழந்திருந்தனர். யாழ் பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இடங்களுடன் தொடர்பைப் பேணும் வகையில் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கான தொலைத்தொடர்பு பேணப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடு உட்பட ஏ-9 பாதைக்கு கிழக்கேயுள்ள பகுதிகளில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களாக விளங்கிய இடங்களில் மக்கள் மீளக்குடியேற சிறீலங்கா படையினர் தடை விதித்து வருகின்றனர்.
http://www.sankathi....x.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8456&cntnt01origid=52&cntnt01returnid=51

Friday, April 23, 2010

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்

0 comments
தமிழீழ
தேசிய தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து சட்டமன்றத்தில்
பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தி.வேல்முருகன் பாகிஸ்தான், சீனா மற்றும் பல
நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை அதையும் தாண்டி
சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது ஒரு மனிதநேயமற்ற,
ஈவிரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல் என்றும்
மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுகொள்ள மாட்டார்கள்.
மேலும் தேசிய தலைவரின் தாயாருக்கு மருத்துவ சேவை அளிக்கவும் அந்த செலவை
தமிழக அரசே செய்ய வேண்டும் என கேட்டு கொண்டதோடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்
சுதர்சனம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறியபோது அதற்கு மறுத்து
பதிலளித்த தி.வேல்முருகன் தேசியத் தலைவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்
என்றும் இதுவரை இலங்கை அரசாங்கம் தலைவரின் இறப்பு சான்றிதழை இந்திய
அரசுக்கு அளிக்கவில்லை அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும்
அளிக்கவில்லை என்றும் கூறினார்

ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் அவர்கள்!

0 comments
ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம்.

ஈழத்தின் இறுதி யுத்த காலத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய கடிதங்கள் நெஞ்சுக்கு நீதியாக வெளிவரும்போதுதான் அவரது கண்ணீர்த் துளிகளின் எடையை அறிந்து கொள்ள முடியும். அவர் டெல்லிக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்காவிட்டால், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்துக் காப்பாற்றியிருக்க முடியாது என்றே உலகம் இப்போதும் நம்புகின்றது.

அவர், பாலு தலைமையில் கனிமொழி குழுவினரை இலங்கைக்கு அனுப்பியிருக்காவிட்டால், அந்த முள்வேலி முகாமிலிருந்து இரண்டு இலட்சம் மக்களையாவது காப்பாற்றி வேறு இடங்களுக்கு அகற்றியிருக்க முடியாது என்று ஐ.நா. கூட நம்புகின்றது. இப்போதும் கூட, தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடிதங்கள் எழுதுவதால்தான் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தமிழில் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகள் புரிந்த தமிழக முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் சிலர் புழுதி வாரித் தூற்றுவதைச் சகிக்க முடியாமல், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்குத் தனது குடும்பப் பிரச்சினையையே தீர்க்க நேரம் போதாமல் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு யார் வருகிறார்கள்? விமான நிலையத்திலிருந்து யார் போகிறார்கள்? அங்கிருந்து யார் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் என்பதையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பக்கம் அழகிரி - ஸ்டாலின் பிரச்சினை விசுவரூபம் கொள்கிறது. மற்றொரு பக்கம் மனைவியும் துணைவியும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். யார் தலைமாட்டில்? யார் கால் மாட்டில்? என்ற பிரச்சனை இன்றுவரை சோனியாவாலும் தீர்க்க முடியாததாகவே நீடிக்கின்றது. அதற்காக ஒரு அரை நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், அங்கேயும் தலைமாடு, கால்மாடு பிரச்சினை உருவாகிவிடுகின்றது.

அரசியல் வாழ்வில், தேவைக்கும் அதிகமாகப் பணத்தைச் சம்பாதித்து, இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டாலும், தேவைக்கு அளவிற்காவது நிம்மதியைச் சம்பாதிக்க முடியாத துக்கம் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது. வாலிப காலத்தில் அதிகமாக ஆசைப்பட்டதால் வாரிசுகள் தொகை அளவுக்கு மீறி, இப்போது அவரைத் தொல்லைப்படுத்தி வருகின்றது.

மூத்த மகன் முத்து முதல், கடைக்குட்டி கனிமொழி வரை சொத்துக்கு மட்டும் சண்டை போட்டால் பரவாயில்லை, அவர்கள் பதவிகளுக்கும் போட்டி போடுவதால் சங்கடம் அவரது தலைக்குமேல் குந்தியே உள்ளது. தமிழகத்தை ஸ்டாலினுக்கும், டெல்லியை அழகிரிக்குமாகப் பகிர்ந்தாலும் பிரச்சினை தீர்வதாக இல்லை. ஆங்கிலம் புரியாத அழகிரி, தனக்குத் தோதான இடமாகத் தமிழகத்தையே தேர்வு செய்கிறார். கனிமொழியும் தனக்கு எதுவும் இல்லையா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

மூத்த மகன் முத்து குடும்பத்துடன் ஐக்கியப்பட்டு விட்டாலும், தான் தலைவரால் ஒதுக்கப்படுவதாகப் புலம்பிக்கொண்டுதான் உள்ளார். செல்வம் மட்டுமல்ல, ஊடகத் துறையும், சினிமாத் துறையும் கூட இப்போது கருணாநிதியிடம் அடைக்கலமாகியுள்ள நிலையில், அசக்க முடியாத சக்தியாக உருவாகிவரும் தனது குடும்பத்தில் சகோதர யுத்தம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே பாட்டி வடை சுட்ட கதை போல், அடிக்கடி தமிழீழ விடுதலைப் போர் இன்றைய நிலையை அடைந்ததற்கு சகோதர யுத்தமே காரணம் என்று தமது வாரிசுகளுக்கு கதை சொல்லி வருகின்றார்.

இத்தனை குடும்பக் குழப்பங்களுக்கு மத்தியில் அன்றாடம் அல்லாடும் மு. கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? மன்னிக்க வேண்டும், சோனியாவின் அன்புக் கட்டளைக்குப் பின்னர் எம்மை எல்லாம் ஈழத் தமிழர் என்று அழைப்பதைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர் என்றே விழித்து வருகின்றார். மயிலிடம் இறகு கோருவது போல், ராஜபக்ஷவிடம் தமிழர்களுக்கான உரிமைகளைக் கேரலாம் என்பதே தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் சோனியா சிந்தனை.

அதை மீறி, மகிந்தருக்கு கோபம் வரும் வகையில் நடந்து மகிந்த சிந்தனை ஊடாக, இலங்கைத் தமிழருக்காக அவர் பெற்றுக் கொடுக்க விரும்பும் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? தேசியத் தலைவர் அவர்களது தாயார் பார்வதி அம்மாளைத் தமிழகத்தில் தரை இறங்க விடுவது தனது இலட்சியப் பயணத்திற்கு இடைஞ்சலாக அமையும் என்பதை மு. கருணாநிதி அவர்கள் புரிந்து கொண்டதில் என்ன தப்பைக் காண முடியும்? தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சோனியா சிந்தனையும், மகிந்த சிந்தனையும் சந்திக்கும் இடத்தில் இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் இடத்தில், பார்ர்வதி அம்மாளின் தமிழகப் பயணம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரைத் திருப்பி மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பியதுடன், சோனியா சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க டெல்லிக்குக் கடிதம் எழுதும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் பலிகளையும், அவர்களோடிருந்த மக்களையும் அழித்துவிட்டதனால், சோனியாவிற்கு இருந்த பயங்கரவாத அச்சத்தைத் தீர்க்க முன்நின்று செயற்பட்ட மு. கருணாநிதி அவர்களது தியாகத்தை சோனியா காந்தி உணராமல் விட்டுவிடுவாரா? ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் இன அழிப்பு புரிந்தபோது, அரை நாள் உண்ணாவிரதம் இருந்து சோனியாவின் மனத்தை மாற்றிய கருணாநிதி அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் முன்னைய தீர்மானத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து வைத்தியம் செய்துகொள்ள மீண்டும் ஒரு அரை நாளை உண்ணாவிரதத்திற்காக ஒதுக்கமாட்டாரா?

மு. கருணாநிதி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்திய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சதி செய்தே, தற்போதைய முதல்வர் மு. கருணாநிதிக்குத் தெரியாமல் திருமதி பார்வதி அம்மாள் அவர்களைத் தமிழகத்தில் தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என ஆத்திரப்படும், அவ்வப்போது ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஜால்ரா போட்டுத் தன்னை நிரப்பிக்கொள்ளும் கி. வீரமணி சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா?

பாவம், முத்துக்குமாரன்... தமிழக மக்களை இவர்களிடமிருந்து மீட்க முயன்று தோற்றே போய்விட்டான்.

நன்றி: ஈழநாடு

அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி 99.4% மக்கள் ஆதரவு

0 comments
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு:

வாக்களித்தோர் எண்ணிக்கை 8274,

தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156,

தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67.

இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்பு குழு பிரதிநிகளுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
 
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8443&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

இந்தோனேசியா அரசினால் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள் சிறையில்: ஏ.பி.சி

0 comments

இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து இந்தனேசியா அரசியால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்தோனேசியா துறைமுகத்தில் தங்கியிருந்த ஈழத்தமிழ் மக்களை இந்தோனேசியா அரசு சில வாக்குறுதிகளை வழங்கி அழைத்துச் சென்றிருந்தது. ஆனால் அவர்கள் தற்போது சிறை போன்ற தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மெர்க் துறைமுகத்தில் உள்ள 150 மேற்பட்ட தமிழ் மக்கள் பேரூந்துகளில் ஏற்றப்பட்டு ஜகார்த்தாவிற்கு அண்மையாக உள்ள பிரதான விமான நிலையப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் தாம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த இருவர் எமது நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா அரசு தெரிவித்தது போல் அல்லாது அவர்கள் வழங்கிய தங்குமிடம் தடுப்பு முகாம் போன்று உள்ளது. ஒரு பெரிய அறையில் 45 மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர், குடும்பத்தில் உள்ள ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

குளிப்பதற்காக அவர்கள் தரும் நீர் மஞ்சள் நிறமாக உள்ளதுடன், செல்லிட தொலைபேசிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா அரசு இவர்களை கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8444&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

ஊடகவியலாளர்கள் படுகொலை : தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா

0 comments

பெருமளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் குற்றத்தை மேற்கொண்டவர்கள் தப்பித்த நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்கை தளமாக கொண்ட ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அதிகளவில் ஊடகவயலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடங்கியுள்ளது.

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அரசுகளுக்கு நாம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசுகளும் எமக்கு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றன. ஆனால் அரசுகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை இந்த இந்த வன்முறைகளை நிறுத்த முடியாது.

2000 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை நாம் கருத்தில் எடுத்துள்ளோம். ஐந்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததை நாம் குறைந்த பட்ச அளவீடாக கணிப்பிட்டுள்ளோம்.

இந்த வருடம் நாம் 12 நாடுகளை பட்டியலிட்டுள்ளோம்.

ஈராக்: 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலையிட்டதில் இருந்து 88 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை.

சிறீலங்கா: 10 ஊடகவிலலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டிக்கப்டவில்லை.

சோமாலியா: 9 ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பிலிப்பைன்ஸ்: நவம்பர் மாதம் அங்கு 30 ஊடகவிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கொலம்பியா: 13 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆப்கானிஸ்த்தான்: 7 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

நேபாளம்: 6 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ரஸ்யா: 18 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

மெக்சிக்கோ: 09 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்த்தான்: 12 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பங்களாதேசம்: 7 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியா: 7 13 ஊடகவிலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8445&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

இந்தியா ஆயுதம் கொடுத்தது - மன்மோகன் ஒப்புதல் - வைகோ

0 comments
http://www.nakkheera...Tv.aspx?WTV=531

நன்றி நக்கீரன்.

மே 18 - போர்க்குற்ற நாள் ! தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம்

0 comments
மே 18 - போர்க்குற்ற நாள்

தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம் மே 18 நாளை போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்துகிறது.


அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே,

மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின்
இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக்
குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள்
பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்...

மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும்,
காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம்
வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம்
பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய
நாள்...

மே 18... மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை
வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்... மிருகவதைச் சட்டம் போட்டு
விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது
மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்...

மே 18... நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது...
வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள்
தள்ளப்பட்ட கொடூர நாள்... விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்...

எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும்
நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க்குற்ற நாளாகத் தமிழீழ மக்கள் அவை
பிரகடனப்படுத்துகின்றது.

எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய...
சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…?
முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம்
மறந்துவிட முடியுமா...? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு
முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட
முடியுமா...?

எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச «போர்க்குற்ற நாள்» என்று
ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர்.

1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும்,
எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக்
கொன்று குவித்தது,

2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது
விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு
நடாத்தியது,

3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,

4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,

5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,

6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப்
பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது, என எண்ணற்ற போர்க்
குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில்
நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வண்ணம்,
சி. பிரதீபன்
இணைப்பாளர்,
அனைத்துலகச் செயலகம்,
தமிழீழ மக்கள் அவை.
INFO.MAKKALAVAI@GMAIL.COM

Thursday, April 22, 2010

நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து

0 comments
நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து
நான்கு பேர் போட்டியின்றித் தெரிவு

நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவாகியுள்ளனர்

மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர். இதில்; வோல் து மார்ன்(94) சென் ஏ மார்ன்(77)
வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸ்; தெற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு தலா ஒவ்வொருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 6 பிரதிநிதிகள் பாரிஸ்(2) சென் சென்டனி(2) வோல் து வாஸ்(1) ஹொ து சென்(1) ஆகிய மாவட்டங்களில் இருந்து மே 2 திகதி தேர்தல் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்ப்படவுள்ளனர். இந்த 4 மாவட்டங்களிலும் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு

0 comments
சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு
[ புதன்கிழமை, 21 ஏப்ரல் 2010, 10:08 GMT புதினப்பலககை] [ கி.வேணி ]

சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID].

சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும் சிறிலங்கா அரசு சார்பில்லாத தனியார் நிறுவனங்கள் மூலமே செய்யப்படும். சிறிலங்கா தனியார் துறை 1400 மில்லியன் ரூபாய்களும், அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் 600 மில்லியன் ரூபாய்களும் முதலீடு செய்யும். ஆக மொத்தமாக 2 பில்லியன் ரூபாய் முதலீடுகளில் ஐந்து தொழில் துறைகள் உருவாக்கப்படும்.

கடல் மற்றும் நன்நீர் மீன்கள் வளர்த்தல், ஆடைகள் தயாரிப்பு, உணவு விநியோகம், தோட்டப் பயிர்ச்செய்கை போன்ற வகையான தொழில் துறைகள் இவற்றில் அடங்கும்.

ஆடைகள் தயாரிப்பு கூட்டுத்தொழில்:

வடக்கு பகுதியில் உள்ள வவுனியாவிற்கு அருகில் ஓமந்தையில் ஆடை தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை உருவாகுவதன் மூலமாக வடக்கு பகுதியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள இளம் விதவைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சுமார் 1000 வேலை வாய்ப்புக்களை ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனம் அளிக்கும்.

மீன் வளர்ப்பு கூட்டுத்தொழில்:

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறிலங்கா மீன்வளர்ப்பு நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் தொழில் கூட்டு ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை வருவாய் மட்டுமன்றி உயர்தர கடல் உணவுகள் மூலமும் வருவாயை இரு மடங்காக திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான தொடர்பை உண்டாக்குதல்:

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை முன்னணி விநியோக நிறுவனம் ஆராய்ந்து அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் வருவாயிலும் உயர்வு ஏற்படும். சுமார் 1500 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதன் மூலம் பலனடைவர். யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய குளிர் சேகரிப்பு மையங்கள் இதற்காக உண்டாக்கப்படும்.

வடக்கில் தோட்டக்கலை கூட்டுத்தொழில்:

சிறிலங்க தோட்டக்கலை நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நவீன முறைகளின் மூலமாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் உற்பத்தி பெருக்கப்படும். இத்திட்டத்தின் படி 1100 விவசாயிகள் பயனடைவர்.

மே 18ல் திட்டமிட்டப்படி மாநாடு: சீமான் உறுதி

0 comments
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது.



மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக்கும் விதமாக எங்கள் தோழர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


மே 18ஆம் தேதி எவ்வளவு அடக்கு முறை வந்தாலும் திட்டமிட்டப்படி மாநாட்டை நடத்தியே தீருவோம். மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.


எங்கள் இயக்கத் தோழர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேட்கலாம். இயக்கத்தில் உள்ள 75 சதவீத பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அதனால் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு கொடுப்போம்.



எந்தப் பிரச்சனை வந்தாலும் சட்டப்படி கையாள எங்கள் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உடனடியாக மத்திய மாநில அரசுகள் முத்துக்குமரனை விடுதலை செய்ய வேண்டும். எங்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும் என்றார்.


நன்றி நக்கீரன்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

0 comments
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது



காலையில் உணவு
உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும்
கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.




2. மிக அதிகமாகச் சாப்பிடுவது



இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.



3. புகை பிடித்தல்



மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.



4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்



நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.



5. மாசு நிறைந்த காற்று



மாசு நிறைந்த
காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை
செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.




6. தூக்கமின்மை



நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.



7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது



தலையை
மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது.
இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன்
மூளையைப் பாதிக்கிறது.




8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது



உடல் நோயுற்ற
காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும்
மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே
சிறந்தது.




9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது



மூளையை அதிகமாக
உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது
இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.




10. பேசாமல் இருப்பது



அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.