Thursday, June 17, 2010

இரண்டு கைகளும் இயலாமல் போனவனிற்கு ஒரு கையாவது கொடுங்கள்

0 comments
இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது....பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது...... திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் வளமாய் வாழலாம் என்கிற கனவுகளுடன் குடும்பமாய் குடிபெயர்ந்தான்.கடந்த வருடம் வன்னியில் காவுகொள்ளப்பட்ட உயிர்களுடன் இவனது கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்லாமல் அவன் கைகளையும் இழந்து இன்று சொந்தக்கிராமத்திற்கே திரும்பியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளுடனும் நாதியற்று நிற்பவனின் கதையை நீங்களே கேளுங்கள். இங்கு அழுத்துவதன் முலம் ஒலிப்பதிவினை கேட்கலாம்...

Posted Image
Posted Image

வைத்தியசாலை அத்தாட்சி
Posted Image

அடையாள அட்டை
Posted Image

0 comments: