Saturday, February 26, 2011

கிளிநொச்சியில் 1300 ஏக்கர் காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிப்பு!

0 comments
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 300 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அரசு அபகரித்துள்ளதாக பிரதேசவாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலப்பரப்பை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் பங்கு போடுக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முருகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்திபுரம், ஆகிய பிரதேசங்களே அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதாக ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வந்த தமது சொந்த இடங்களை அரசு அபகரித்துக் கொண்டு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதற்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். யுத்தத்தின காரணமாக தமது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும் இந்த அரசின் காரணமாக தமது நிலத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சங்கமம்-கொம்

0 comments: