Thursday, April 22, 2010

நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து

0 comments
நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து
நான்கு பேர் போட்டியின்றித் தெரிவு

நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவாகியுள்ளனர்

மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர். இதில்; வோல் து மார்ன்(94) சென் ஏ மார்ன்(77)
வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸ்; தெற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு தலா ஒவ்வொருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 6 பிரதிநிதிகள் பாரிஸ்(2) சென் சென்டனி(2) வோல் து வாஸ்(1) ஹொ து சென்(1) ஆகிய மாவட்டங்களில் இருந்து மே 2 திகதி தேர்தல் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்ப்படவுள்ளனர். இந்த 4 மாவட்டங்களிலும் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

0 comments: