Thursday, December 16, 2010

இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)

0 comments
இலங்கையில் தேசிய மலராக நீல அல்லி (நீலோற்பலம்) என சரியாகப் பெயர் குறிபிடப்பட்டாலும் அதற்கெனப் பயன் படுத்தப்படும் மலரின் படம் பிழையானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

இச் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளவர் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தியகன்தாவலயும், வயம்ப பல்கலைக்கழகத்தின் தாவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கபில யகன்தாவலயுமாகும்.

இலங்கையின் தேசிய மலராக 1986 ஆம் ஆண்டு முதல் பிரகடணப்படுத்தப்பட்ட நீல அல்லி மலருக்கு பதிலாக இலங்கையின் அரச இணையத் தளங்களிளும் பாடசாலை பாடப் புத்தகங்களிலும் ஏனைய அரச ஆவனங்களிலும் பிழையான ஒர் காட்டு மலர் காட்டப் பட்டுள்ளதாகவும் அது வெளி நாட்டிலிருந்து அறிமுகம் செய்யப் பட்டதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தி யகன்தாவலயும் வடமேல் மாகாண (வயம்ப) பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான கபிலயகன்தாவலயும் தெரிவிக்கின்றனர்.

முன்னர் நில்மானெல் என்றழைக்கப்பட்ட அம்மலர் தற்போது 'நவுச்சலீ" என்ற பெயரில் அழைக்கப் படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக பேராதெனிய பல்கலைகழகத்தின் தாவரவியல் பேராசிரியர் தீப்தி யகன்தாவல கூறுகின்றார்.

இலங்கைக்கு பொறுத்தமான மலர் ஒன்றினையே தேசிய மலராக அறிமுகம் செய்த போதும் தவறான மலர் ஒன்றின் படத்தையே பிரசுரம் செய்து வந்துள்ளதாகவும் கூறுகின்றார்.

இலங்கையில் உள்ள தற்போதைய ஆவனங்களில் குறிப்பிடப்படும் நீல அல்லி பூவின் படம் பிழையானதாகும். அது கூடுதலான ஊதா வர்ணத்தைக் கொண்டது.

ஆனால் உண்மையான நீல அல்லி பூ இளம் வர்ணமுடையது என்றும் பேராசியிர் தீப்தி யகன்தாவல மேலும் கூறிகின்றார்.

பிழையான பூவையும் சரியான பூவையும் இங்கு தரப்பட்டுள்ளது. சரியான பூ இளம் வர்ணமுடையதாகும்.

பிழையான பூ

Posted Image

உண்மையான நீல அல்லி பூ


Posted Image

0 comments: