Monday, December 13, 2010

இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்

0 comments
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள்ளன. இந்தியாவில் முதன்மை அரசியல் கட்சிகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது போராட்டங்களை நடத்துகின்ற போதும் மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்ற தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை போன்றோர் இலங்கையில் சமாதானம் நிலவுவதை நிராகரிக்க மாட்டார்கள்.

இலங்கையில் பயங்கரவாத்தை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு குறித்து சிவ்சங்கர் மேனனிடம் வினவப்பட்ட போது, இலங்கை முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்றதாக அவர் பதிலளித்துள்ளார். இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என்பதை கூறமுடியும் என தெரிவித்துள்ள அவர், அது வேறெங்கும் இருந்தல்ல இலங்கைக்குள் இருந்தே வரமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மானம் கெட்டவங்க மட்டும் வெளி நாட்டுல மலையாளிய அடிக்குறாங்க, குசராத்திய கொல்றாங்க ன்னு சத்தம் கொடுத்து ஓடுறாங்க நாங்க எம் மக்களை அடிப்பது பற்றி கவலை கொள்ள கூடாதாம்

மலையாள தே ........ பசங்க

என்னடா கேக்க ஆளில்லைன்னு எனனவேன்ன பேசலாம்னு நினைப்பு

0 comments: