Tuesday, October 5, 2010

தலவாக்கலையில் தொடரூந்து நிலையத்தில் வெடிப்பொருள் மீட்பு

0 comments
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010
நேற்று முற்பகல் 11.15 அளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குப்பைகள் வீசப்படும் இடத்திலிருந்து வெடிமருந்துப் பை ஒன்று கைப்பற்றுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பை 14 கிலோ கிராம் நிறையினைக் கொண்டதெனவும், பையினுள் 25 அடி நீளம் கொண்ட 40 நூல் பந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், கைப்பற்றப்பட்ட பை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈழ நாதம்

0 comments: