Tuesday, October 5, 2010

சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில்

0 comments
சரத் பொன்சேகாவுக்கு சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில்
ஸ்ரீலங்காவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் ஆயுத ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக 30 மாத கால கடூழிய சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைக்கூடத்தில் அச்சு இயந்திர தொழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவயின சிங்கள செய்திதாள் இந்த தகவலை வெலிக்கடை சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவரை மேற்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இதன் அடிப்படையில் சரத் பொன்சேகா, சிறைச்சாலை அச்சகத்தில் பணியாற்ற பணிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்துள்ள சரத் பொன்சேகா, இந்த பணிகளை செய்ய மறுப்பாராக இருந்தால் இதனைவிட கடுமையான பணிகள் அவர் மீது சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
pathivu

0 comments: