Sunday, October 24, 2010

துயிலும் இல்லங்களை இடித்து அரசபடைகளுக்கு வெற்றி தூபி கட்டுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது - நீல் பூனே

0 comments
அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது. ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என மனம் உடைந்துபோயுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதினிதியும் கனடா நாட்டு பிரகையுமாகிய நீல் பூனே.

உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல எனவும் கூறியுள்ளார் பூனே.

0 comments: