அரச வைபவங்களில் சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சட்டவிரோதமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய கீதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருப்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடாகும் எனவும் கண்டித்துள்ளது.
அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பாக இன்று தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநாகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்.
வண எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதற்கமைய எமது நாட்டில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும். தமிழில் இசைப்பதை அனுமதிக்க முடியாது.
அவ்வாறெனில் எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட வேண்டுமென கேட்பார்கள். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களது தேசிய மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
அரச வைபவங்களில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படும் போது தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலமும் தமிழில் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமாகும். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாம் இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Thursday, December 16, 2010
தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெல உறுமய


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment