விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய :
13 டிசம்பர் 2010
இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் ..
புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன – கோதபாய :
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடற்படையின் 60 ஆண்டு பூர்த்தி விழாவில் உலகின் பல முக்கிய நாடுகள் பங்குபற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒருபோதும் கடற்படை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் சீனாவும், ரஸ்யாவும் இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சிரேஸ்ட அதிகாரிகளை இந்த நிகழ்விற்காக அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்றிருந்தால் இந்த ஐந்து நாடுகளும் கடற்படை ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உலகின் பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அனுமதி வழங்காது கப்பல்களும், உயர் படையதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டிருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளமை புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகடந்த பயங்கரவாதத்தை முறியடிப்பது தெடர்பான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Monday, December 13, 2010
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன கோதபாய


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment