சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு அதிக உதவிகள் தேவைப்படும் இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில்இருந்து செஞ்சிலுவைச் சங்க குழு அலுவலகம் மூட வைக்கப்பட்டிருப்பது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை அவமதிக்கும் ஒரு செயல்.
காணாமல் போன தமிழ் இளைஞர்களை கண்டுபிடித்து உறவினர்களோடு இணைத்து வைக்கும் பணியிலும் செஞ்சிலுவைச் சங்க குழு ஈடுபட்டு வந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திட்டமிட்ட வகையில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் அரசின் நோக்கத்துக்காகவே செஞ்சிலுவைச் சங்க குழு வெளியேற்றப்படுகின்றதா என்று பிரித்தானிய தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார உதவி அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பதில்கள் வழங்கினார். பிரித்தானிய அரசு இது குறித்து அறிந்து வைத்துள்ளது என்றும் – யுத்தத்துக்கு பிந்திய இந்நாட்களில் இலங்கை அரசு சொன்ன சொல் தவறாமல் நடக்க வேண்டும் என பிரிட்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
இதேசமயம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பாண அலுவலகமும் இவ்வாண்டின் இறுதியுடன் தனது முழுமையான செயற்பாடுகளை இடைநிறுத்துகின்றது. அடுத்த ஆண்டின் ஜனவரியுடன், அதன் பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் செயற்பட்டு வந்த செஞ்சிலுவைச் சங்க கிளை அலுவலகங்கள் படிப்படியாக பூட்டப்பட்டிருந்தது. தற்போது எஞ்சியிருந்த நல்லூர் கோவில் வீதியிலுள்ள அதன் யாழ். மாவட்ட தலைமை அலுவலகமும் மூடப்படுகின்றது.
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
December
(30)
- சிங்கள படையினருக்காக பெண் போராளிகளை விருந்தாக்கிய ...
- சென்னையில், இலங்கை தமிழர்கள் நால்வர் கைது
- படையினரிடம் சரணடைந்த கரிகாலனும் படுகொலை? - போரில் ...
- பொங்கல் நாளன்று தமிழீழ அரசாங்கம் தேசிய அட்டைகளை அ...
- புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் க...
- சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா
- பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம்
- சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக வ...
- காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நட...
- சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியே...
- பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றா...
- இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்...
- சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்...
- ஐநாவிடம் போர்க்குற்ற ஆவணங்கள்
- இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட ...
- தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்! ஹெ...
- அவுஸ்த்திரேலிய கிறிஸ்த்துமஸ் தீவுக்கருகில் நடந்த ப...
- அல்சீரிய விடுதலைப் போராட்டம் – வரலாறு கற்றுத் தரும...
- ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் த...
- அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள...
- ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக...
- ஆட்சிக்காக உருவாக்கப்படவில்லை நாம் தமிழர் இயக்கம்....
- தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட...
- தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு
- தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங...
- விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடு...
- பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்...
- தாமதிக்கும் ஒவ்வேர் கணமும்........?
- இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள...
- இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே...
-
▼
December
(30)
Sunday, December 19, 2010
சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியேற்றப்படுகின்றது?


Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment