இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக வடபகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க பிரபல இந்தித் திரைப்பட நடிகர் சல்மான்கான் தீர்மானித்துள்ளார்.
இந்த வீடமைப்பு தொடர்பில் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் சல்மான்கான் இலங்கை செல்லவுள்ளதாக இலங்கை அரசத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான தூதுவராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த பிரபல இந்தித் நடிகர் திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்
0 comments:
Post a Comment