Friday, May 21, 2010

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

0 comments
வன்னியில்
கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது
செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில
காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.


சிறீலங்காவின் சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send email வெளியிட்டுள்ளது.


இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி
வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்யும் கோர
காட்சிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இச்செய்தியானது உலக தமிழ் மக்களை
உலுக்கியுள்ள இவ்வேளையில் எதிர்வரம் காலங்களில் மேலும் படங்கள் வெளிவரும்
என்பதும் இன்னும் ஒரு செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.


புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக
உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், சிறீலங்காவை
போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக செய்திக்கு இங்கே அழுத்தவும்

















0 comments: