Wednesday, May 19, 2010

சரணடைந்தவர்களை நாம் சுட்டுக்கொன்றோம் சனல்4 தொலைக்காட்சிக்கு இராணுவம் தெரிவிப்பு

0 comments
சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு என்னை
பணித்தார்கள் அதன்படி நாங்கள் சித்திரவதை செய்தோம் பின்னர்
சுட்டுக்கொன்றோம். இவ்வாறு சனல் 4 தொலைகாட்சிக்கு சாட்சியம்
அளித்துள்ளனர். இராணுவத்தினர்.
வீடியோ :




தமிழர்களைச் சுட்டுக் கொல்லுமாறு யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச உயர்
மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இராணுவத்தினருக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என தமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து
பிரித்தானியாவின் சனல்‍‍-4 தொலைக்காட்சிச் சேவை இன்று செய்தி
வெளியிடுள்ளது. அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு
உத்தரவிட்டிருந்தமையை இறுதிக் கட்டப் போரில் நேரடியாக பங்குபற்றிய
படையினர் இருவர் தமது தொலைக்காட்சிச் சேவைக்கு உறுதிபடுத்தினர் என்று அது
குறிப்பிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயரதிகார் என்றும் மற்றவர் சிப்பாய்
என்று அது தெரிவித்துள்ளது.

video: My link

எல்லோரையும் கொல்லுங்கள், எல்லோரையும் முடியுங்கள் என்று அரசஉயர்
மட்டத்தைச் சேர்ந்த அந்த நபரிடம் இருந்து தகவல் வந்திருந்தது என்றும் அந்த
உத்தரவு அப்படியே நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த இராணுவ அதிகாரி சனல்- 4
இற்கு தெரிவித்தார் என்றும் அதில் கூறப்படூகிறது.

அவ்வாறே, அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வந்த‌ உத்தரவை
நிறைவேற்றுமாறு அதிகாரிகள் சிப்பாய்களுக்கு உத்தரவிட்டிருந்தனரென அந்த
சிப்பாய் சொன்னார் என்று சனல்-4 குறிப்பிட்டுள்ளது.அந்த உத்தரவின் படி
அனைவரும் கொல்லப்பட்டனர் என்றும் அந்த சிப்பாய் தெரிவித்தார் என்றும் அது
சுட்டிக் காட்டி உள்ளது.

www.eelanatham.net

0 comments: