Sunday, May 9, 2010

வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை

0 comments

வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக்குமாறு சிங்கள பிரதமர் கோரிக்கை
வவுனியா நிருபர்
ஞாயிற்றுகிழமை, மே 9, 2010

இலங்கையில் புலிகளை ஒழித்துவிட்டோம் ஆனால் வெளி நாடுகளில் நீங்கள் புலிகளை வளர்க்காதீர்கள் இவ்வாறு சிங்கள பிரதமர் டி.எம். ஜெயரட்ன அவர்கள் வெளி நாடுகளை கேட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசித்துவரும் சுமார் 15 லட்சம் புலம்பெயர் தமிழ்மக்கள் இலங்கையில் தங்கள் சமூகத்தினருக்கென சுதந் திரதாயகம் ஒன்றை உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கென இயக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அனுதாபிகள் எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் சுவிற்ஸர்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிப்பு இயக்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். என்று தனது கண்டுபிடிப்பினை வெளியிடுள்ளார்.

மற்றுமொரு நாட்டுக்கு எதிராக எவரும் எமது மண்ணைப் பயன்படுத்த நாம் அனுமதி அளிக்கமாட்டோம். மேற்கு நாடுகள் இலங்கைக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு ஆவன செய்வதில்லை என்று நான் கருதுகிறேன். மேற்கு நாடுகள் அத்தகையோ ருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://www.eelanatha...%AE%95%E0%AF%88

0 comments: