கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணமல் போனவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில், கானமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரித்து வருகின்றோம்.
யாழ்ப்பாணம், மான்னார், வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து 300ற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக முழமையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட ரீதியாக குழக்கள் அமைக்கப்பட்டு பனாங்கொடை, இரத்மலானை, வெலிக்கந்த போன்ற இடங்களில் உள்ள முகாம்களுக்கு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை அழைத்தச் சென்று தேடவுள்ளோம்.
0 comments:
Post a Comment