Tuesday, May 11, 2010

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்படவுள்ளனர்:

0 comments
பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.



சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும் வைபவங்கள் எதிர்வரும் மே 20ம் திகதி காலிமுகத்திடலிலும் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: