Tuesday, May 11, 2010

மலேசியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றார் பார்வதி அம்மாள்

0 comments
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனையுடன் தமிழத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.




இந்நிலையில் மலேசியாவில் வரும் 15ஆம் தேதிக்குள் விசா காலம் முடிவடைவதால், பார்வதி அம்மாள் இலங்கை செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து சிவாஜிலிங்கம் உதவியோடு திங்கள்கிழமை மாலை இலங்கை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பார்வதி அம்மாள், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.



தமிழகத்தில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருப்பது பற்றி தமிழக அரசு மூலமோ, இந்திய அரசு மூலமோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள சிவாஜிலிங்கம், இலங்கையில் தனது பாதுகாப்பில் வைத்து பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாவும் தெரிவித்துள்ளார்.



தமிழக அரசின் நிபந்தனைகளை பார்வதி அம்மாள் உறவினர்கள் ஏற்பாகளா? தமிழகம் சென்று சிகிச்சை பெறுமாறு பார்வதி அம்மாள் உறவினர்கள் கேட்டுக்கொண்டால் என்ற கேள்விக்கு, சிவாஜிலிங்கம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.



http://www.nakkheera...ws.aspx?N=31928

0 comments: