வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளால் பரபரப்பு(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம், மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர்.
அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள பகிஷ்கரிப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
பல்லாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், மிகவும் துணிச்சலான விடையமாகும். சிவகுமார் எவ்வாறு ஒரு விடுதலை உணர்வை தூண்டினாரோ அதற்கு ஒப்பான நிகழ்வே தற்ப்போது மிகவும் துணிச்சலான முறையில் நடந்தேறியுள்ளது.
துண்டுப் பிரசுரங்களில் உள்ள வாசகங்கள் பின் வருமாறு:
வலி சுமந்த நெஞ்சோடு
விடுதலை நோக்கி பயணிப்போம் ……….
போராட்டமே வாழ்வாகிப்போன எம்மக்கள் இகாந்திய தேசத்தின் சூழ்ச்சியாலும், சிங்களத்தின் அடக்குமுறையினாலும் , முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர். 50,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அவலக்குரல் எழுப்பியும் ,அவர்களது சாவினை சர்வதேசத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை…
மரணித்தது மக்கள் மட்டுமல்ல..உலகின் ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும்தான்…
பட்டினி போட்டு, குண்டுகள் வீசி, பாதுகாப்பு வலயத்திற்கு வாவென்று அழைத்து, அம்மக்களை கொன்ற கொடூரம் மன்னிக்கப்பட முடியாத போர்க்குற்றம்.
களமாடி விழுப்புண் அடைந்த வேங்கைகளும், எறிகணை வீச்சுக்களால் அங்கங்களை இழந்த பொது மக்களும், சுற்றி வளைத்து நின்ற சிங்கள-பிராந்திய அரக்கர்களால் மே 18 இல் வேட்டையாடப்பட்டனர்.
இந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தப் போவது போல், சர்வதேச இராஜதந்திரக் கூத்தாடிகள் போக்குக்காட்டினர்.
இந்தியாவை மீறி, எந்த இராஜதந்திர அணுவும் அசைய மறுத்துவிட்டது.
கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் வேண்டுதலை எவருமே செவிமடுக்கவில்லை.
தமிழின அழிவை உலகிற்கு உணர்த்த, ஐ .நா.முன்றலில் தனது உடலை தீயில் சங்கமமாக்கினான் வேங்கை முருகதாஸ்.
சாஸ்திரி பவனில், தோழன் முத்துக்குமார் மூட்டிய பெரு நெருப்பு,தமிழகத்தில் தமிழின உணர்வினை தட்டி எழுப்பியது.
அனைத்துலக ஆதிக்க மனிதர்களின் நலன்களுக்குள் இ ஈழத்தமிழினத்தின் அவலக்குரல் கரைந்து போயிற்று.
இன்னமும் அவல வாழ்வு தொடர்கின்றது.
ஒரு இலட்சம் மக்களின், வதை முகாம் அவலம் குறித்து பேரினவாத அரசு கவலை கொள்ளவில்லை.
மறுபடியும் வெள்ளை வான் கும்பலின் அடக்குமுறைகள் விரிவடைகின்றன. கொதிநிலைப் பூமியாக மாறுகிறது யாழ் குடா.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், வலிமிகுந்த நினைவு சுமந்து, எழுச்சி கொள்ளும் இந்நாளில், அந்த மாவீரர்களின்-பொது மக்களின் உறுதி தளரா இலட்சிய வேட்கையை, நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.
விழ விழ எழுவோம்.. இலட்சியம் நோக்கிய பயணத்தில், இறுதிவரை இணைந்திருப்போம்..
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி - மனிதன் இணையம்
Search
Labels
Blog Archive
-
▼
2010
(105)
-
▼
May
(37)
- இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காண...
- சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் ...
- இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணி...
- AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !
- நாடு கடந்த தமிழீழ அரசின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக பொன் பா...
- இந்தியாவிற்கு போர் ஆலோசனை வழங்க இலங்கை தயார்
- சரணடைந்தவர்களை நாம் சுட்டுக்கொன்றோம் சனல்4 தொலைக்க...
- சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி
- வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம்
- 13 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்து கொடுக்க ...
- தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தய...
- மே 18 நாடு கடங்த தமிழீழ அரசின் முதல் அமர்வு அமெரிக...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிராகிரியுங்கள்! - ஐ...
- நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்!
- சீனா விரிக்கும் 'முத்து மாலை வியூகம்' இந்தியாவை உட...
- சீனா: சிறிலங்காவினது 'நிபந்தனையற்ற' கூட்டாளி
- காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக...
- கனேடிய நாடாளுமன்றத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான...
- சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்?
- சல்மான்கான்,லாராதத்தா,விவேக் ஓபராய் ஆகியோருக்கு எத...
- மீண்டும் மின்னஞ்சல் அனுப்புவோம் - தமிழர்களே IIFA -...
- முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருமாறு உலகத் தல...
- கொழும்பு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - ...
- அமிதாப்பின் வீட்டின் முன்பாக உணர்வுடன் மீண்டும் போ...
- மலேசியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றார் பார்வதி அ...
- முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்...
- நாடு கடந்த தமிழீழம்: நடந்து முடிந்த தேர்தல்
- வெளி நாடுகளில் தமிழீழத்திற்கு புத்தியிர் அதனை தடுக...
- மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள்
- கொடியும் கோசமும் தமிழர் உரிமையை பெற்றுத் தருமா?
- நாம்தமிழர் மே - 18
- கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்க...
- இலங்கையை புறக்கணிப்போம் நீதிக்கு துணைநிற்போம்
- விடுதலைப்புலிகளின் புதிய அணுகுமுறை!
- கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது
- முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து ...
-
▼
May
(37)
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment